கோவை வெரைட்டி ஹாலில் மது அருந்தும்போது தகராறு: மதுக்கடை ஊழியர் கொலை வழக்கில் இருவர் கைது

கோவை வெரைட்டி ஹால் பகுதியில் மதுக்கடையில் மது அருந்திய இருவர் ஊழியருடன் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கி கொலை செய்த சம்பவத்தில் காய்கறி கடை வைத்துள்ள பிரபு, தனியார் நிறுவன ஊழியர் மனோஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


Coimbatore: கோவை வெரைட்டி ஹால் பகுதியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மதுக்கடை ஊழியரை தாக்கி கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மதியம் நடந்தது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (60). கோவை வெரைட்டி ஹால் பகுதியில் உள்ள மதுக்கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இடையார் வீதியைச் சேர்ந்தவர் பிரபு (27). இவர் அப்பகுதியில் உள்ள காய்கறி சந்தையில் கடை வைத்துள்ளார். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் அவரது நண்பர் மனோஜ் (28).

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் பிரபு மற்றும் மனோஜ் இருவரும் வெரைட்டி ஹால் பகுதியில் உள்ள மதுக்கடைக்கு சென்று மது அருந்தினர். அப்போது அங்கு ஊழியராக பணிபுரிந்த சுந்தர்ராஜுடன் மதுபோதையில் தகராறு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தகராறு வாக்குவாதமாக மாறியது.

இதையடுத்து கோபமடைந்த பிரபு மற்றும் மனோஜ் இருவரும் சேர்ந்து சுந்தர்ராஜை சுவரில் தள்ளி நெஞ்சு பகுதியில் குத்தினர். கடுமையாக தாக்கப்பட்ட சுந்தர்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து மதுக்கடை நிர்வாகம் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தது.

தகவல் அறிந்த வெரைட்டி ஹால் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டனர். உடற்கூறாய்வுக்காக சுந்தர்ராஜின் உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் அடிப்படையில் போலீசார் குற்றவாளிகள் பிரபு மற்றும் மனோஜ் இருவரையும் கைது செய்தனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...

“நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” - கோவையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வந்தபோது, “நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” உள்ள...

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...