கோவை வெரைட்டி ஹாலில் மது அருந்தும்போது தகராறு: மதுக்கடை ஊழியர் கொலை வழக்கில் இருவர் கைது

கோவை வெரைட்டி ஹால் பகுதியில் மதுக்கடையில் மது அருந்திய இருவர் ஊழியருடன் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கி கொலை செய்த சம்பவத்தில் காய்கறி கடை வைத்துள்ள பிரபு, தனியார் நிறுவன ஊழியர் மனோஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


Coimbatore: கோவை வெரைட்டி ஹால் பகுதியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மதுக்கடை ஊழியரை தாக்கி கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மதியம் நடந்தது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (60). கோவை வெரைட்டி ஹால் பகுதியில் உள்ள மதுக்கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இடையார் வீதியைச் சேர்ந்தவர் பிரபு (27). இவர் அப்பகுதியில் உள்ள காய்கறி சந்தையில் கடை வைத்துள்ளார். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் அவரது நண்பர் மனோஜ் (28).

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் பிரபு மற்றும் மனோஜ் இருவரும் வெரைட்டி ஹால் பகுதியில் உள்ள மதுக்கடைக்கு சென்று மது அருந்தினர். அப்போது அங்கு ஊழியராக பணிபுரிந்த சுந்தர்ராஜுடன் மதுபோதையில் தகராறு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தகராறு வாக்குவாதமாக மாறியது.

இதையடுத்து கோபமடைந்த பிரபு மற்றும் மனோஜ் இருவரும் சேர்ந்து சுந்தர்ராஜை சுவரில் தள்ளி நெஞ்சு பகுதியில் குத்தினர். கடுமையாக தாக்கப்பட்ட சுந்தர்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து மதுக்கடை நிர்வாகம் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தது.

தகவல் அறிந்த வெரைட்டி ஹால் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டனர். உடற்கூறாய்வுக்காக சுந்தர்ராஜின் உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் அடிப்படையில் போலீசார் குற்றவாளிகள் பிரபு மற்றும் மனோஜ் இருவரையும் கைது செய்தனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...