கோவை வெரைட்டி ஹாலில் மது அருந்தும்போது தகராறு: மதுக்கடை ஊழியர் கொலை வழக்கில் இருவர் கைது

கோவை வெரைட்டி ஹால் பகுதியில் மதுக்கடையில் மது அருந்திய இருவர் ஊழியருடன் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கி கொலை செய்த சம்பவத்தில் காய்கறி கடை வைத்துள்ள பிரபு, தனியார் நிறுவன ஊழியர் மனோஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


Coimbatore: கோவை வெரைட்டி ஹால் பகுதியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மதுக்கடை ஊழியரை தாக்கி கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மதியம் நடந்தது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (60). கோவை வெரைட்டி ஹால் பகுதியில் உள்ள மதுக்கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இடையார் வீதியைச் சேர்ந்தவர் பிரபு (27). இவர் அப்பகுதியில் உள்ள காய்கறி சந்தையில் கடை வைத்துள்ளார். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் அவரது நண்பர் மனோஜ் (28).

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் பிரபு மற்றும் மனோஜ் இருவரும் வெரைட்டி ஹால் பகுதியில் உள்ள மதுக்கடைக்கு சென்று மது அருந்தினர். அப்போது அங்கு ஊழியராக பணிபுரிந்த சுந்தர்ராஜுடன் மதுபோதையில் தகராறு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தகராறு வாக்குவாதமாக மாறியது.

இதையடுத்து கோபமடைந்த பிரபு மற்றும் மனோஜ் இருவரும் சேர்ந்து சுந்தர்ராஜை சுவரில் தள்ளி நெஞ்சு பகுதியில் குத்தினர். கடுமையாக தாக்கப்பட்ட சுந்தர்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து மதுக்கடை நிர்வாகம் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தது.

தகவல் அறிந்த வெரைட்டி ஹால் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டனர். உடற்கூறாய்வுக்காக சுந்தர்ராஜின் உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் அடிப்படையில் போலீசார் குற்றவாளிகள் பிரபு மற்றும் மனோஜ் இருவரையும் கைது செய்தனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

பொள்ளாச்சியில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் கலந்துரையாடல்

பொள்ளாச்சி வாணியர் சேவா சங்க வளாகத்தில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் சிறப்பு கலந்துரையாடல் நடத்தினார். ப...

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...