சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜய் குறித்து பெண்கள் சரமாரியாக கேள்வி எழுப்பிய வீடியோ தற்போது வைரலாக வருகிறது.


Coimbatore: கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில் தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். வாரச்சந்தை காரணமாக மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், காய்கறி வியாபாரிகளிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி ஆதரவு திரட்டினார்.



அப்போது அங்கிருந்த ஒரு காய்கறி கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த பெண்மணி மற்றும் இரண்டு இளம்பெண்களிடம் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டதுடன், தங்களது தலைவர் விஜய் ஆட்சிக்கு வந்தால் பெண்களும் பொதுமக்களும் பாதுகாப்பாக இருப்பார்கள் என தெரிவித்தார்.



இதனைத் தொடர்ந்து, அந்த பெண்கள் வேட்பாளரிடம் பல கேள்விகளை எழுப்பினர். “உங்கள் தலைவர் விஜய் தனது சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை எனச் செய்திகள் வெளியாகின்றன. அப்படியானவர் பொதுமக்களை எப்படி கவனிப்பார்?” என்றும், “உங்கள் கட்சியில் இளம் நிர்வாகிகள் மூத்தவர்களை மரியாதையற்ற முறையில் பேசுவது ஏன்? இதை உங்கள் தலைவர் ஏன் கண்டிக்கவில்லை?” என்றும் கேள்வி எழுப்பினர்.



இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் வேட்பாளர் தயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது. உடன் இருந்த கட்சி நிர்வாகிகள் சமாதானப்படுத்த முயன்றபோதும், “ஆதாரத்துடன் பதில் சொல்ல வேண்டும்” என பெண்கள் வலியுறுத்தினர்.

இதனால் அங்கு சிறிய பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்களும் கூடத் தொடங்கிய நிலையில், வேட்பாளர், தனது ஆதரவாளர்களுடன் அங்கிருந்து வெளியேறினார்.

இந்த சம்பவம் அங்கு இருந்த சிலரால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...