சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜய் குறித்து பெண்கள் சரமாரியாக கேள்வி எழுப்பிய வீடியோ தற்போது வைரலாக வருகிறது.


Coimbatore: கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில் தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். வாரச்சந்தை காரணமாக மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், காய்கறி வியாபாரிகளிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி ஆதரவு திரட்டினார்.



அப்போது அங்கிருந்த ஒரு காய்கறி கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த பெண்மணி மற்றும் இரண்டு இளம்பெண்களிடம் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டதுடன், தங்களது தலைவர் விஜய் ஆட்சிக்கு வந்தால் பெண்களும் பொதுமக்களும் பாதுகாப்பாக இருப்பார்கள் என தெரிவித்தார்.



இதனைத் தொடர்ந்து, அந்த பெண்கள் வேட்பாளரிடம் பல கேள்விகளை எழுப்பினர். “உங்கள் தலைவர் விஜய் தனது சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை எனச் செய்திகள் வெளியாகின்றன. அப்படியானவர் பொதுமக்களை எப்படி கவனிப்பார்?” என்றும், “உங்கள் கட்சியில் இளம் நிர்வாகிகள் மூத்தவர்களை மரியாதையற்ற முறையில் பேசுவது ஏன்? இதை உங்கள் தலைவர் ஏன் கண்டிக்கவில்லை?” என்றும் கேள்வி எழுப்பினர்.



இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் வேட்பாளர் தயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது. உடன் இருந்த கட்சி நிர்வாகிகள் சமாதானப்படுத்த முயன்றபோதும், “ஆதாரத்துடன் பதில் சொல்ல வேண்டும்” என பெண்கள் வலியுறுத்தினர்.

இதனால் அங்கு சிறிய பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்களும் கூடத் தொடங்கிய நிலையில், வேட்பாளர், தனது ஆதரவாளர்களுடன் அங்கிருந்து வெளியேறினார்.

இந்த சம்பவம் அங்கு இருந்த சிலரால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...