சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்குறுதிகளை எடுத்துரைத்து வாக்குச் சேகரிப்பு மேற்கொண்டார். குழந்தைக்கு துதித்ரா என பெயரிட்டு மக்களிடம் நெருக்கம் ஏற்படுத்தினார்.


Coimbatore: தேசிய ஜனநாயக கூட்டணியின் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram சிங்காநல்லூர் பகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நந்தா நகர், திருக்குமரன் நகர் எக்ஸ்டென்ஷன், திருக்குமரன் நகர், SRD லேஅவுட், டெக்ஸ்டைல் லேஅவுட் போன்ற பகுதிகளில் வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்தார்.






வாக்குச் சேகரிப்பின்போது AIADMK அரசின் திட்டங்களையும், தேர்தல் வாக்குறுதிகளையும் விரிவாக எடுத்துரைத்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். பகுதி மக்கள் வேட்பாளர் K R Jayaram-க்கு மேள தாளங்கள் முழங்க பூக்கள் தூவி ஆரத்தி எடுத்து உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.




சிறப்பு அம்சமாக MGR வேடமனிந்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த K R Jayaram மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தார். இதன்மூலம் தமிழக மக்களின் அன்பிற்குரிய தலைவர் MGR-ன் நினைவை மீட்டெடுத்து மக்களின் உள்ளங்களில் இடம்பிடித்தார்.




அப்பகுதியில் பெற்றோர்கள் தங்களது குழந்தைக்கு பெயர் சூட்ட வேட்பாளரிடம் கேட்டுக்கொண்டனர். இதனை ஏற்று K R Jayaram குழந்தைக்கு 'துதித்ரா' என பெயரிட்டு ஆசி வழங்கினார். இந்த செயல் மக்களிடம் அவருக்கான நெருக்கத்தை மேலும் அதிகரித்தது.




வாக்குச் சேகரிப்பு பணியில் பகுதி செயலாளர் சிவக்குமார், வார்டு செயலாளர்கள் சசிகுமார், சந்திரசேகர், தேசிய ஜனநாயக கூட்டணியின் BJP, AMMK, PMK கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள், AIADMK நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு வாக்குச் சேகரிப்பில் பங்கேற்றனர்.




தேர்தல் பரப்புரையின் இறுதிக்கட்டத்தில் சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளரின் பல்வேறு முயற்சிகள் கட்சிக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...