சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்குறுதிகளை எடுத்துரைத்து வாக்குச் சேகரிப்பு மேற்கொண்டார். குழந்தைக்கு துதித்ரா என பெயரிட்டு மக்களிடம் நெருக்கம் ஏற்படுத்தினார்.


Coimbatore: தேசிய ஜனநாயக கூட்டணியின் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram சிங்காநல்லூர் பகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நந்தா நகர், திருக்குமரன் நகர் எக்ஸ்டென்ஷன், திருக்குமரன் நகர், SRD லேஅவுட், டெக்ஸ்டைல் லேஅவுட் போன்ற பகுதிகளில் வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்தார்.






வாக்குச் சேகரிப்பின்போது AIADMK அரசின் திட்டங்களையும், தேர்தல் வாக்குறுதிகளையும் விரிவாக எடுத்துரைத்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். பகுதி மக்கள் வேட்பாளர் K R Jayaram-க்கு மேள தாளங்கள் முழங்க பூக்கள் தூவி ஆரத்தி எடுத்து உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.




சிறப்பு அம்சமாக MGR வேடமனிந்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த K R Jayaram மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தார். இதன்மூலம் தமிழக மக்களின் அன்பிற்குரிய தலைவர் MGR-ன் நினைவை மீட்டெடுத்து மக்களின் உள்ளங்களில் இடம்பிடித்தார்.




அப்பகுதியில் பெற்றோர்கள் தங்களது குழந்தைக்கு பெயர் சூட்ட வேட்பாளரிடம் கேட்டுக்கொண்டனர். இதனை ஏற்று K R Jayaram குழந்தைக்கு 'துதித்ரா' என பெயரிட்டு ஆசி வழங்கினார். இந்த செயல் மக்களிடம் அவருக்கான நெருக்கத்தை மேலும் அதிகரித்தது.




வாக்குச் சேகரிப்பு பணியில் பகுதி செயலாளர் சிவக்குமார், வார்டு செயலாளர்கள் சசிகுமார், சந்திரசேகர், தேசிய ஜனநாயக கூட்டணியின் BJP, AMMK, PMK கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள், AIADMK நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு வாக்குச் சேகரிப்பில் பங்கேற்றனர்.




தேர்தல் பரப்புரையின் இறுதிக்கட்டத்தில் சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளரின் பல்வேறு முயற்சிகள் கட்சிக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...