பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்றும் வீக்கம் காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் 48 மணி நேர ஓய்வு அறிவுறுத்தியுள்ளனர்.


Coimbatore: பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக கடந்த சில நாட்களாக தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கில், கடந்த சில நாட்களாக கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார் வானதி சீனிவாசன். கோடையின் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தொகுதி முழுவதும் வீதி வீதியாகச் சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.

இந்த தொடர் பிரச்சாரத்தின் விளைவாக அவருக்கு காலில் கடுமையான வலியும், வீக்கமும் ஏற்பட்டுள்ளது. வலியின் தீவிரம் அதிகரித்ததைத் தொடர்ந்து, கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை மாலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவரைப் பரிசோதித்த மருத்துவக் குழுவினர் தேவையான சிகிச்சை அளித்துள்ளனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஓய்வின்றி உழைத்ததே இந்த உடல்நலப் பாதிப்புக்கு முக்கிய காரணம் என அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த 48 மணி நேரம் அவர் கட்டாயம் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அவர் விரைவில் குணமடைந்து மீண்டும் தேர்தல் களத்துக்குத் திரும்ப வேண்டும் என பாஜக கட்சியினர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...