கோவை-குவைத் இடையே நேரடி விமான சேவை ஏப்ரல் இறுதியில் தொடக்கம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குவைத் நாட்டிற்கு Jazeera ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் ஏப்ரல் இறுதியில் நேரடி விமான சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. வாரத்தில் இரு தினங்கள் சேவை வழங்கப்படும். 15 நாட்கள் மட்டும் இச்சேவை செயல்படும் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.


Coimbatore: கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குவைத் நாட்டிற்கு நேரடி விமான சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தற்போது ஷார்ஜா, சிங்கப்பூர், அபுதாபி ஆகிய மூன்று வெளிநாடுகளுக்கு நேரடி விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக அபுதாபிக்கு மட்டும் விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.





கோவை விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் மற்றும் ஷார்ஜாவிற்கு வழக்கம் போல் விமானங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோவையிலிருந்து குவைத் நாட்டிற்கு நேரடி விமான சேவை Jazeera என்ற ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் ஏப்ரல் மாதம் இறுதியில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.





இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, கோவையிலிருந்து குவைத் நாட்டிற்கு Jazeera ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் விமான சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. வாரத்தில் இரு தினங்கள் சேவை வழங்க வாய்ப்புள்ளது. தற்போது அந்த நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டுள்ள விமான சேவை நேரம் மாற்றி அமைக்க வேண்டி உள்ளது.





இந்த பணிகள் நிறைவடைந்த பின் அதிகாரப்பூர்வமாக கோவை-குவைத் இடையே விமான சேவை தொடங்குவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். இந்த விமான சேவை நிரந்தரமானது அல்ல. 15 நாட்கள் மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அனைத்து விவரங்களும் அதிகாரப்பூர்வமாக பின்னர் வெளியிடப்படும் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...