கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்றும் மும்பைக்கு 4 விமானங்கள் இயங்குகின்றன. சர்வதேச இணைப்புகள், வசதியான இருக்கைகள் மற்றும் சூடான உணவு வசதிகளை காரணம் காட்டி சென்னை, பூனே உள்ளிட்ட நகரங்களுக்கு சேவைகள் தொடங்க வேண்டும் என்று தொழில்துறையினர் கோருகின்றனர்.


Coimbatore: கோவை சர்வதேச விமான நிலையத்தில் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்களின் விமான சேவைகளை அதிகரிக்க வேண்டும் என்று தொழில்துறையினர் வலியுறுத்தியுள்ளனர். உலக நாடுகளுக்கு இணைப்பு விமான சேவைகள், வசதியான இருக்கைகள், சூடான உணவு வகைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏர் இந்தியா வழங்குவதால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.



கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பின் இயக்குனர் சதீஷ் இதுகுறித்து கூறும்போது, "ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா குழுமம் நிர்வகிக்க தொடங்கிய நாள் முதல் அந்நிறுவனத்தின் சேவைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுகிறது" என்றார். கோவை சர்வதேச விமான நிலையத்தில் தற்போது ஏர் இந்தியா சார்பில் டெல்லி மற்றும் மும்பை நகரங்களுக்கு 4 விமானங்கள் இயக்கப்படுகின்றன.






மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா வாங்கிய பிறகு அந்த நிறுவனத்தின் சேவைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுவதாக சதீஷ் தெரிவித்தார். குறிப்பாக பெரும்பாலும் குறித்த நேரத்தில் விமானங்கள் இயக்கப்படுவது, தூய்மை, சூடான பலவகை உணவுகள் பரிமாறப்படுவது, மிகவும் வசதியான இருக்கைகள், பல்வேறு நாடுகளுக்கு இணைப்பு விமான சேவைகள் வழங்கப்படுவது உள்ளிட்டவை ஏர் இந்தியா நிறுவனத்தின் சிறப்பு அம்சங்களாக உள்ளன என்று அவர் விளக்கினார்.




ஏர் இந்தியா நிறுவனம் பல்வேறு சர்வதேச விமான நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கொண்டுள்ளதால் உதாரணமாக கோவையில் இருந்து டெல்லிக்கு சென்றால் அங்கிருந்து அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு இணைப்பு விமான சேவையை பெற முடியும். ஒருமுறை கோவையில் பயணிகள் தங்களது உடைமைகளை செக்இன் செய்தால் போதும், டெல்லி சென்று மீண்டும் அங்கிருந்து எந்த வெளிநாட்டுக்கு செல்கிறாரோ அந்த விமான நிலையத்தில் சென்று தனது உடமையை பெற்றுக் கொள்ளலாம்.




இது போன்ற பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ள காரணத்தால் ஏர் இந்தியா மற்றும் அதன் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்களின் விமான சேவைகளுக்கு பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது என்று சதீஷ் தெரிவித்தார்.




கோவை விமான நிலையத்தில் டெல்லி, மும்பை நகரங்களுக்கு கூடுதல் விமான சேவைகளை வழங்கவும், சென்னை, பூனே உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு விமான சேவைகளை தொடங்கவும் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.




"இதுகுறித்த கோரிக்கையை மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவிடம் வழங்கியுள்ளோம். விரைவில் புதிய சேவைகள் தொடங்கப்படும் என நம்புகிறோம்" என்று சதீஷ் கூறினார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...