வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் பாலித்தின் பைகளை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஓசை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்

கோவை மாவட்டத்தின் மிகவும் பிரதிபெற்றதும், சுற்றுலாத் தளமுமாகிய வெள்ளியங்கிரி மலைக்கு ஆண்டுதோறும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வந்து செல்வர். அவ்வாறு வருபவர்கள் வெள்ளியங்கிரி மலைப் பகுதியில் ஏறும்பொழுது தாங்கள் கொண்டு வரும் உணவுப் பொருட்களை உண்டுவிட்டு பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை மலைப்பகுதியிலேயே வீசிவிடுவர்.

இவ்வாறான பிளாஸ்டிக் பைகள் மூலம் அந்த மலைப்பகுதியில் உள்ள இயற்கையும், விலங்குகள் உள்ளிட்டவைகளும் பாதிக்கப்பட்டு வந்தன.



இதனைத் தவிர்க்கும் வகையில் கோவையை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஓசை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வெள்ளியங்கிரி மலைப்பகுதியின் அடிவாரத்தில் மலை ஏறுவோரிடம் பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், அவர்கள் கொண்டு வந்திருந்த பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதலும் செய்தனர்.

இதுகுறித்து, ஓசை அமைப்பின் சையது கூறுகையில், கோவை மாவட்டத்தின் இயற்கை சொர்க்கமான வெள்ளியங்கிரி மலைப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளும், வெள்ளியங்கிரி ஆண்டவர் பக்தர்களும் அதிகளவில் வருவர். மேலும், இன்று சித்ராபௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் இந்த மலைப்பகுதிக்கு வந்துள்ளனர்.

இதில், பெரும்பாலானோர் உணவு உள்ளிட்ட பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் கொண்டு வந்துள்ளனர். அவர்கள் அதனை பயன்படுத்திவிட்டு மலைப்பகுதியிலேயே வீடுவிடுவதால் வெள்ளியங்கிரி மலை தனது இயற்கைத் தன்மையினை இழக்க நேரிடுகிறது. 

இதனை தவிக்கும் வகையில், அவர்களிடம் இருந்து பிளாஸ்டிக் பைகள் கைப்பற்றப்பட்டு மக்கும் காகிதத்தால் ஆன பைகள் வழங்கப்பட்டு வருகிறது.

மக்கள், தாமாக முன்வந்து பிளாஸ்டிக் உள்ளிட்ட சுற்றுப்புறத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை தவிர்த்து இயற்கையை பாதுகாக்க வேண்டும்" என்றார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...