கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அடினோ வைரஸ் தொற்றால் ஏற்படும் இந்த நோய் குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


Coimbatore: கோவையில் 'Madras Eye' எனப்படும் கண் நோய் பாதிப்பு வேகமாக பரவி வருவதால், மருத்துவர்கள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாளொன்றுக்கு சராசரியாக 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் இந்த நோய்க்கான சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.




கண் விழியையும் இமையையும் இணைக்கும் சவ்வு படலத்தில் அடினோ வைரஸ் தொற்றால் 'Madras Eye' நோய் ஏற்படுகிறது. கண்கள் சிவப்படைதல், வலி, அதிகமாக நீர் கசிதல், இமைகள் ஒட்டிக் கொள்வது போன்றவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.




ஆரம்ப நிலையில், இந்த தொற்று கண்ணின் வெள்ளை படலத்தை மட்டும் பாதிக்கும். உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சை பெறாவிட்டால், கருவிழியில் புண் ஏற்பட்டு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஒரு வாரம் வரை காய்ச்சல், தொண்டை வலி, காது வலி போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம். வெயில் கொளுத்த துவங்கிவிட்டதால் இந்த நோய் பரவுவது அதிகரித்துள்ளது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.




கோவை அரசு மருத்துவமனைக்கு தினமும் சராசரியாக 10 பேர் 'Madras Eye' நோய்க்கான சிகிச்சை பெற வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வரும் நாட்களில் இந்த பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், மக்கள் அலெர்ட்டாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.




கண் மருத்துவர் சரவணன் இதுகுறித்து கூறுகையில், "'Madras Eye' பாதித்தவரின் கண்களை நேராக பார்ப்பதால் இந்த நோய் பரவாது. அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் மூலமாக மட்டுமே வைரஸ் பரவும். ஒருவருக்கு வழங்கிய சொட்டு மருந்தை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது. ஒரு கண் பாதித்திருந்தால், அடுத்த கண்ணுக்கும் சேர்த்து அதே சொட்டு மருந்தை ஊற்றக் கூடாது. 'வருமுன் காப்போம்' என்ற கோட்பாடு 'Madras Eye' நோய்க்கு பொருந்தாது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்," என்று தெரிவித்தார்.




மருத்துவர்கள் மக்களுக்கு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பரிந்துரைத்துள்ளனர். கைகளை அடிக்கடி சுத்தமாக கழுவ வேண்டும், கண்களை கைகளால் தேய்க்க வேண்டாம், தனிப்பட்ட பொருட்களான துண்டு, கைக்குட்டை போன்றவற்றை பகிர்ந்து கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர். அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறும் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...