கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அடினோ வைரஸ் தொற்றால் ஏற்படும் இந்த நோய் குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


Coimbatore: கோவையில் 'Madras Eye' எனப்படும் கண் நோய் பாதிப்பு வேகமாக பரவி வருவதால், மருத்துவர்கள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாளொன்றுக்கு சராசரியாக 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் இந்த நோய்க்கான சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.




கண் விழியையும் இமையையும் இணைக்கும் சவ்வு படலத்தில் அடினோ வைரஸ் தொற்றால் 'Madras Eye' நோய் ஏற்படுகிறது. கண்கள் சிவப்படைதல், வலி, அதிகமாக நீர் கசிதல், இமைகள் ஒட்டிக் கொள்வது போன்றவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.




ஆரம்ப நிலையில், இந்த தொற்று கண்ணின் வெள்ளை படலத்தை மட்டும் பாதிக்கும். உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சை பெறாவிட்டால், கருவிழியில் புண் ஏற்பட்டு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஒரு வாரம் வரை காய்ச்சல், தொண்டை வலி, காது வலி போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம். வெயில் கொளுத்த துவங்கிவிட்டதால் இந்த நோய் பரவுவது அதிகரித்துள்ளது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.




கோவை அரசு மருத்துவமனைக்கு தினமும் சராசரியாக 10 பேர் 'Madras Eye' நோய்க்கான சிகிச்சை பெற வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வரும் நாட்களில் இந்த பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், மக்கள் அலெர்ட்டாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.




கண் மருத்துவர் சரவணன் இதுகுறித்து கூறுகையில், "'Madras Eye' பாதித்தவரின் கண்களை நேராக பார்ப்பதால் இந்த நோய் பரவாது. அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் மூலமாக மட்டுமே வைரஸ் பரவும். ஒருவருக்கு வழங்கிய சொட்டு மருந்தை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது. ஒரு கண் பாதித்திருந்தால், அடுத்த கண்ணுக்கும் சேர்த்து அதே சொட்டு மருந்தை ஊற்றக் கூடாது. 'வருமுன் காப்போம்' என்ற கோட்பாடு 'Madras Eye' நோய்க்கு பொருந்தாது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்," என்று தெரிவித்தார்.




மருத்துவர்கள் மக்களுக்கு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பரிந்துரைத்துள்ளனர். கைகளை அடிக்கடி சுத்தமாக கழுவ வேண்டும், கண்களை கைகளால் தேய்க்க வேண்டாம், தனிப்பட்ட பொருட்களான துண்டு, கைக்குட்டை போன்றவற்றை பகிர்ந்து கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர். அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறும் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...