கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அடினோ வைரஸ் தொற்றால் ஏற்படும் இந்த நோய் குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


Coimbatore: கோவையில் 'Madras Eye' எனப்படும் கண் நோய் பாதிப்பு வேகமாக பரவி வருவதால், மருத்துவர்கள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாளொன்றுக்கு சராசரியாக 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் இந்த நோய்க்கான சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.




கண் விழியையும் இமையையும் இணைக்கும் சவ்வு படலத்தில் அடினோ வைரஸ் தொற்றால் 'Madras Eye' நோய் ஏற்படுகிறது. கண்கள் சிவப்படைதல், வலி, அதிகமாக நீர் கசிதல், இமைகள் ஒட்டிக் கொள்வது போன்றவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.




ஆரம்ப நிலையில், இந்த தொற்று கண்ணின் வெள்ளை படலத்தை மட்டும் பாதிக்கும். உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சை பெறாவிட்டால், கருவிழியில் புண் ஏற்பட்டு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஒரு வாரம் வரை காய்ச்சல், தொண்டை வலி, காது வலி போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம். வெயில் கொளுத்த துவங்கிவிட்டதால் இந்த நோய் பரவுவது அதிகரித்துள்ளது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.




கோவை அரசு மருத்துவமனைக்கு தினமும் சராசரியாக 10 பேர் 'Madras Eye' நோய்க்கான சிகிச்சை பெற வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வரும் நாட்களில் இந்த பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், மக்கள் அலெர்ட்டாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.




கண் மருத்துவர் சரவணன் இதுகுறித்து கூறுகையில், "'Madras Eye' பாதித்தவரின் கண்களை நேராக பார்ப்பதால் இந்த நோய் பரவாது. அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் மூலமாக மட்டுமே வைரஸ் பரவும். ஒருவருக்கு வழங்கிய சொட்டு மருந்தை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது. ஒரு கண் பாதித்திருந்தால், அடுத்த கண்ணுக்கும் சேர்த்து அதே சொட்டு மருந்தை ஊற்றக் கூடாது. 'வருமுன் காப்போம்' என்ற கோட்பாடு 'Madras Eye' நோய்க்கு பொருந்தாது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்," என்று தெரிவித்தார்.




மருத்துவர்கள் மக்களுக்கு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பரிந்துரைத்துள்ளனர். கைகளை அடிக்கடி சுத்தமாக கழுவ வேண்டும், கண்களை கைகளால் தேய்க்க வேண்டாம், தனிப்பட்ட பொருட்களான துண்டு, கைக்குட்டை போன்றவற்றை பகிர்ந்து கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர். அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறும் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...