மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஆசிரியர் கைது

கோவை கருமத்தம்பட்டியை அடுத்த கோதாபாளையம் பகுதியில் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கான பள்ளி இயங்கி வருகிறது. கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முருகசாமி என்பவர் இப்பள்ளியை தொடங்கி நடத்தி வந்தார்.

இப்பள்ளியில் சுமார் 200 மாணவர்கள் படித்து வருகின்றனர். ரம்யா என்ற மாணவி கடந்த 13 ஆண்டுகளாக இப்பள்ளியில் படித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று மாலை ரம்யா கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். 

அதில், பள்ளியின் தாளாளர் முருகசாமி தனக்கு மதுவை கொடுத்து கற்பழித்ததாகவும், இதனால், கருவுற்ற தன்னை பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் அறங்காவலர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருக்கலைப்பு செய்ததாகவும் கூறினார்.

ரம்யாவுடன் சேர்ந்து, சுமதி என்ற பெண்ணும் முருகசாமி மீது பாலியல் புகார் அளித்தார். இது தொடர்பாக, கருமத்தம்பட்டி போலீசார் முருகசாமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் பள்ளியின் அறங்காவலர் சித்ராதேவி, மேற்பார்வையாளர் ராணி, விடுதி காப்பாளர் பரிமளா, ரேவதி மற்றும் பாபு ஆகியோரை போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். இதில், ராணி என்பவர் தலைமறைவாகிவிட்ட நிலையில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

இன்று சூலூர் தாசில்தார் பழனி முன்னிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவிகளை ஆசிரியர் பாலியல் வற்புறுத்தலுக்கு உள்ளாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களை கொதிப்படைய செய்துள்ளது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...