கோவையில் பாதுகாப்பு நிறைந்த அடுக்குமாடி குடியிருப்பில் நகை, பணம் கொள்ளை

கோவை மாவட்டம், நஞ்சுண்டாபுரம் அருகே அமைந்துள்ளது பார்ஸன் அடுக்குமாடி குடியிருப்பு. முக்கிய பிரமுகர்கள் வசித்து வரும் இந்த குடியிருப்பு பகுதியில் உள்ள அனைத்து நுழைவு வாயில்களிலும் தனியார் பாதுகாப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, பார்ஸன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து திருப்பூரில் பனியன் ஏற்றுமதி செய்துவரும் சிவானந்த் (38) என்பவர் தனது குடும்பத்தினருடன் வெளிமாநிலத்திற்கு சென்றுவிட்டு விட்டிற்கு திரும்பிவந்துள்ளார்.

அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்துள்ளது. தொடர்ந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, அங்கிருந்த பீரோவின் கதவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த 28 பவுன் நகை மற்றும் 1.25 லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டிருந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, இராமநாதபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். மேலும், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ஆய்வு மெற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்த இராமநாதபுரம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதுகாப்புகள் நிறைந்த அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெற்றுள்ள இந்த திருட்டு அந்தக் குடியிருப்பில் வசிப்போர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...