மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர். நிலை கட்டணம், டிமாண்ட் சார்ஜ் 50 சதவீதம் குறைப்பு, ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு நிறுத்தம் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.


Coimbatore: எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு தொடர்பான வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.



தமிழ்நாடு மின் நுகர்வோர் சங்கத்தின் முன்னாள் தலைவர் பிரதீப், மறுசுழற்சி ஜவுளி தொழில் கூட்டமைப்பு தலைவர் ஜெயபால், தமிழ்நாடு சூரிய ஒளி மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொருளாளர் சாஸ்தா ராஜா, ரயில்வே விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் சுருளி வேல் ஆகியோர் இதுகுறித்து விரிவாக கூறியுள்ளனர்.




அவர்கள் கூறியதாவது: 2020ஆம் ஆண்டு கொரோனா நோய்த்தொற்று பரவல் காலத்தில் தொடங்கி, மூலப்பொருட்கள் விலை உயர்வு, அதிக GST வரி விதிப்பு பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உற்பத்தி துறை சார்ந்த MSME தொழில் நிறுவனங்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன.






இந்தியாவில் 47 லட்சம் குறு, சிறு, நடுத்தர தொழில் முனைவோர்கள் உள்ள மூன்றாவது மாநிலமாக தமிழகம் உள்ளது. தற்போது ஈரான் - இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் மற்றும் ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் உள்ளிட்டவை உலக சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.




இத்தகைய சூழ்நிலையில் உள்நாட்டு சந்தையில் இதர 10 போட்டி மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் தான் அதிக மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது நடைமுறையில் உள்ள நிலை கட்டணம் மற்றும் டிமாண்ட் சார்ஜ் இரண்டையும் 50 சதவீதமாக குறைக்க வேண்டும்.






அதேபோல் சூரிய ஒளி ஆற்றல் மின் உற்பத்தி தொழில் முனைவோருக்கு விதிக்கப்படும் நெட்வொர்க் கட்டணம் நீக்கப்பட வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேல் ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்ற நடைமுறை முற்றிலும் கைவிட வேண்டும்.




ஏற்கனவே மூலப் பொருட்கள் விலை உயர்வை உள்ளிட்ட காரணங்களால் தொழிலில் நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் என தமிழ்நாட்டில் பல்வேறு தொழில் அமைப்புகள் சார்பில் 8 கட்ட போராட்டம் நடத்தப்பட்ட போதும் மின்கட்டணம் குறைக்கப்படவில்லை.



எனவே எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் வாக்குறுதி பட்டியலில் மின்கட்டண குறைப்பு உள்ளிட்ட மின்சார துறை சார்ந்த தொழில்துறை கோரிக்கைகளை நிறைவேற்றும் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் முடிவு சாதகமாக அமையும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...