மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர். நிலை கட்டணம், டிமாண்ட் சார்ஜ் 50 சதவீதம் குறைப்பு, ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு நிறுத்தம் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.


Coimbatore: எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு தொடர்பான வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.



தமிழ்நாடு மின் நுகர்வோர் சங்கத்தின் முன்னாள் தலைவர் பிரதீப், மறுசுழற்சி ஜவுளி தொழில் கூட்டமைப்பு தலைவர் ஜெயபால், தமிழ்நாடு சூரிய ஒளி மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொருளாளர் சாஸ்தா ராஜா, ரயில்வே விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் சுருளி வேல் ஆகியோர் இதுகுறித்து விரிவாக கூறியுள்ளனர்.




அவர்கள் கூறியதாவது: 2020ஆம் ஆண்டு கொரோனா நோய்த்தொற்று பரவல் காலத்தில் தொடங்கி, மூலப்பொருட்கள் விலை உயர்வு, அதிக GST வரி விதிப்பு பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உற்பத்தி துறை சார்ந்த MSME தொழில் நிறுவனங்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன.






இந்தியாவில் 47 லட்சம் குறு, சிறு, நடுத்தர தொழில் முனைவோர்கள் உள்ள மூன்றாவது மாநிலமாக தமிழகம் உள்ளது. தற்போது ஈரான் - இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் மற்றும் ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் உள்ளிட்டவை உலக சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.




இத்தகைய சூழ்நிலையில் உள்நாட்டு சந்தையில் இதர 10 போட்டி மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் தான் அதிக மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது நடைமுறையில் உள்ள நிலை கட்டணம் மற்றும் டிமாண்ட் சார்ஜ் இரண்டையும் 50 சதவீதமாக குறைக்க வேண்டும்.






அதேபோல் சூரிய ஒளி ஆற்றல் மின் உற்பத்தி தொழில் முனைவோருக்கு விதிக்கப்படும் நெட்வொர்க் கட்டணம் நீக்கப்பட வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேல் ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்ற நடைமுறை முற்றிலும் கைவிட வேண்டும்.




ஏற்கனவே மூலப் பொருட்கள் விலை உயர்வை உள்ளிட்ட காரணங்களால் தொழிலில் நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் என தமிழ்நாட்டில் பல்வேறு தொழில் அமைப்புகள் சார்பில் 8 கட்ட போராட்டம் நடத்தப்பட்ட போதும் மின்கட்டணம் குறைக்கப்படவில்லை.



எனவே எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் வாக்குறுதி பட்டியலில் மின்கட்டண குறைப்பு உள்ளிட்ட மின்சார துறை சார்ந்த தொழில்துறை கோரிக்கைகளை நிறைவேற்றும் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் முடிவு சாதகமாக அமையும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...