மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர். நிலை கட்டணம், டிமாண்ட் சார்ஜ் 50 சதவீதம் குறைப்பு, ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு நிறுத்தம் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.


Coimbatore: எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு தொடர்பான வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.



தமிழ்நாடு மின் நுகர்வோர் சங்கத்தின் முன்னாள் தலைவர் பிரதீப், மறுசுழற்சி ஜவுளி தொழில் கூட்டமைப்பு தலைவர் ஜெயபால், தமிழ்நாடு சூரிய ஒளி மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொருளாளர் சாஸ்தா ராஜா, ரயில்வே விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் சுருளி வேல் ஆகியோர் இதுகுறித்து விரிவாக கூறியுள்ளனர்.




அவர்கள் கூறியதாவது: 2020ஆம் ஆண்டு கொரோனா நோய்த்தொற்று பரவல் காலத்தில் தொடங்கி, மூலப்பொருட்கள் விலை உயர்வு, அதிக GST வரி விதிப்பு பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உற்பத்தி துறை சார்ந்த MSME தொழில் நிறுவனங்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன.






இந்தியாவில் 47 லட்சம் குறு, சிறு, நடுத்தர தொழில் முனைவோர்கள் உள்ள மூன்றாவது மாநிலமாக தமிழகம் உள்ளது. தற்போது ஈரான் - இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் மற்றும் ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் உள்ளிட்டவை உலக சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.




இத்தகைய சூழ்நிலையில் உள்நாட்டு சந்தையில் இதர 10 போட்டி மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் தான் அதிக மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது நடைமுறையில் உள்ள நிலை கட்டணம் மற்றும் டிமாண்ட் சார்ஜ் இரண்டையும் 50 சதவீதமாக குறைக்க வேண்டும்.






அதேபோல் சூரிய ஒளி ஆற்றல் மின் உற்பத்தி தொழில் முனைவோருக்கு விதிக்கப்படும் நெட்வொர்க் கட்டணம் நீக்கப்பட வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேல் ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்ற நடைமுறை முற்றிலும் கைவிட வேண்டும்.




ஏற்கனவே மூலப் பொருட்கள் விலை உயர்வை உள்ளிட்ட காரணங்களால் தொழிலில் நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் என தமிழ்நாட்டில் பல்வேறு தொழில் அமைப்புகள் சார்பில் 8 கட்ட போராட்டம் நடத்தப்பட்ட போதும் மின்கட்டணம் குறைக்கப்படவில்லை.



எனவே எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் வாக்குறுதி பட்டியலில் மின்கட்டண குறைப்பு உள்ளிட்ட மின்சார துறை சார்ந்த தொழில்துறை கோரிக்கைகளை நிறைவேற்றும் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் முடிவு சாதகமாக அமையும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...