கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை நடத்தி புரோக்கர்கள் சூரிய கலா, மூர்த்தி மற்றும் ஒரு இளம் பெண் உட்பட மூவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Coimbatore: கோவை இடையர் வீதி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபசார தொழில் நடத்தப்படுவதாக வெரைட்டி ஹால் ரோடு போலீஸ் நிலையத்திற்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து போலீசார் சாதாரண உடையில் அப்பகுதிக்கு சென்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

சந்தேகத்திற்குரிய வீடு ஒன்றில் அதிரடியாக நுழைந்த போலீசார், அங்கு இளம் பெண் ஒருவரை வைத்து விபசாரம் நடத்தப்படுவதை கண்டுபிடித்தனர். உடனடியாக விசாரணை நடத்திய போலீசார், இந்த விபசார வலையில் ஈடுபட்டிருந்தவர்களை பிடித்தனர்.

இதில், சாமி ஐயர் புது வீதியைச் சேர்ந்த சூரிய கலா (60) மற்றும் தொண்டாமுத்தூரை அடுத்த தளியூர் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (48) ஆகிய இருவரும் விபசார புரோக்கர்களாக செயல்பட்டு வந்ததும், அவர்கள் சுந்தராபுரத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை இந்த தொழிலில் ஈடுபடுத்தி வந்ததும் தெரியவந்தது.

போலீசார் புரோக்கர்கள் சூரிய கலா, மூர்த்தி மற்றும் விபசாரத்தில் ஈடுபட்ட இளம் பெண் ஆகிய மூவரையும் கைது செய்தனர். இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சமீப காலமாக கோவையில் வாடகை வீடுகளை எடுத்து, குடும்பம் நடத்துவது போல் நாடகமாடி விபசார தொழில் நடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதுபோன்ற பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள், தனியாக வரும் ஆண்களை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

எனவே வீடுகளை வாடகைக்கு விடும் வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரர்களை முழுமையாக சரிபார்த்து கவனமாக இருக்க வேண்டும் என்றும், சந்தேகமான நடவடிக்கைகள் இருப்பின் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...