கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை நடத்தி புரோக்கர்கள் சூரிய கலா, மூர்த்தி மற்றும் ஒரு இளம் பெண் உட்பட மூவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Coimbatore: கோவை இடையர் வீதி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபசார தொழில் நடத்தப்படுவதாக வெரைட்டி ஹால் ரோடு போலீஸ் நிலையத்திற்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து போலீசார் சாதாரண உடையில் அப்பகுதிக்கு சென்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

சந்தேகத்திற்குரிய வீடு ஒன்றில் அதிரடியாக நுழைந்த போலீசார், அங்கு இளம் பெண் ஒருவரை வைத்து விபசாரம் நடத்தப்படுவதை கண்டுபிடித்தனர். உடனடியாக விசாரணை நடத்திய போலீசார், இந்த விபசார வலையில் ஈடுபட்டிருந்தவர்களை பிடித்தனர்.

இதில், சாமி ஐயர் புது வீதியைச் சேர்ந்த சூரிய கலா (60) மற்றும் தொண்டாமுத்தூரை அடுத்த தளியூர் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (48) ஆகிய இருவரும் விபசார புரோக்கர்களாக செயல்பட்டு வந்ததும், அவர்கள் சுந்தராபுரத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை இந்த தொழிலில் ஈடுபடுத்தி வந்ததும் தெரியவந்தது.

போலீசார் புரோக்கர்கள் சூரிய கலா, மூர்த்தி மற்றும் விபசாரத்தில் ஈடுபட்ட இளம் பெண் ஆகிய மூவரையும் கைது செய்தனர். இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சமீப காலமாக கோவையில் வாடகை வீடுகளை எடுத்து, குடும்பம் நடத்துவது போல் நாடகமாடி விபசார தொழில் நடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதுபோன்ற பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள், தனியாக வரும் ஆண்களை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

எனவே வீடுகளை வாடகைக்கு விடும் வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரர்களை முழுமையாக சரிபார்த்து கவனமாக இருக்க வேண்டும் என்றும், சந்தேகமான நடவடிக்கைகள் இருப்பின் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...