கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை நடத்தி புரோக்கர்கள் சூரிய கலா, மூர்த்தி மற்றும் ஒரு இளம் பெண் உட்பட மூவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Coimbatore: கோவை இடையர் வீதி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபசார தொழில் நடத்தப்படுவதாக வெரைட்டி ஹால் ரோடு போலீஸ் நிலையத்திற்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து போலீசார் சாதாரண உடையில் அப்பகுதிக்கு சென்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

சந்தேகத்திற்குரிய வீடு ஒன்றில் அதிரடியாக நுழைந்த போலீசார், அங்கு இளம் பெண் ஒருவரை வைத்து விபசாரம் நடத்தப்படுவதை கண்டுபிடித்தனர். உடனடியாக விசாரணை நடத்திய போலீசார், இந்த விபசார வலையில் ஈடுபட்டிருந்தவர்களை பிடித்தனர்.

இதில், சாமி ஐயர் புது வீதியைச் சேர்ந்த சூரிய கலா (60) மற்றும் தொண்டாமுத்தூரை அடுத்த தளியூர் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (48) ஆகிய இருவரும் விபசார புரோக்கர்களாக செயல்பட்டு வந்ததும், அவர்கள் சுந்தராபுரத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை இந்த தொழிலில் ஈடுபடுத்தி வந்ததும் தெரியவந்தது.

போலீசார் புரோக்கர்கள் சூரிய கலா, மூர்த்தி மற்றும் விபசாரத்தில் ஈடுபட்ட இளம் பெண் ஆகிய மூவரையும் கைது செய்தனர். இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சமீப காலமாக கோவையில் வாடகை வீடுகளை எடுத்து, குடும்பம் நடத்துவது போல் நாடகமாடி விபசார தொழில் நடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதுபோன்ற பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள், தனியாக வரும் ஆண்களை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

எனவே வீடுகளை வாடகைக்கு விடும் வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரர்களை முழுமையாக சரிபார்த்து கவனமாக இருக்க வேண்டும் என்றும், சந்தேகமான நடவடிக்கைகள் இருப்பின் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...