கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை நடத்தி புரோக்கர்கள் சூரிய கலா, மூர்த்தி மற்றும் ஒரு இளம் பெண் உட்பட மூவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Coimbatore: கோவை இடையர் வீதி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபசார தொழில் நடத்தப்படுவதாக வெரைட்டி ஹால் ரோடு போலீஸ் நிலையத்திற்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து போலீசார் சாதாரண உடையில் அப்பகுதிக்கு சென்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

சந்தேகத்திற்குரிய வீடு ஒன்றில் அதிரடியாக நுழைந்த போலீசார், அங்கு இளம் பெண் ஒருவரை வைத்து விபசாரம் நடத்தப்படுவதை கண்டுபிடித்தனர். உடனடியாக விசாரணை நடத்திய போலீசார், இந்த விபசார வலையில் ஈடுபட்டிருந்தவர்களை பிடித்தனர்.

இதில், சாமி ஐயர் புது வீதியைச் சேர்ந்த சூரிய கலா (60) மற்றும் தொண்டாமுத்தூரை அடுத்த தளியூர் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (48) ஆகிய இருவரும் விபசார புரோக்கர்களாக செயல்பட்டு வந்ததும், அவர்கள் சுந்தராபுரத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை இந்த தொழிலில் ஈடுபடுத்தி வந்ததும் தெரியவந்தது.

போலீசார் புரோக்கர்கள் சூரிய கலா, மூர்த்தி மற்றும் விபசாரத்தில் ஈடுபட்ட இளம் பெண் ஆகிய மூவரையும் கைது செய்தனர். இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சமீப காலமாக கோவையில் வாடகை வீடுகளை எடுத்து, குடும்பம் நடத்துவது போல் நாடகமாடி விபசார தொழில் நடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதுபோன்ற பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள், தனியாக வரும் ஆண்களை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

எனவே வீடுகளை வாடகைக்கு விடும் வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரர்களை முழுமையாக சரிபார்த்து கவனமாக இருக்க வேண்டும் என்றும், சந்தேகமான நடவடிக்கைகள் இருப்பின் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...