கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி வாகனத்தை வழங்கியுள்ளது. நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சிவ கணேஷ் இந்த வாகனத்தை மருத்துவமனை டீன் டாக்டர் நிர்மலாவிடம் ஒப்படைத்தார்.


கோவை: கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகம் செய்வதற்கென பிரத்யேக பேட்டரி வாகனத்தை ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது.

கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு உணவு வழங்கியதுடன், கொரோனா நிதியாக முதன் முதலாக அரசுக்கு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சிவ கணேஷ். கோவை மட்டுமின்றி அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லும் கோவை அரசு மருத்துவமனைக்கு புதிய பேட்டரி வாகனத்தை ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது.



மருத்துவமனையின் உள்ளே பெரிய உணவு பாத்திரங்களை கொண்டு செல்வதற்கும், மருந்துகளை ஆங்காங்கே உள்ள மருத்துவ பிரிவுகளுக்கு எடுத்து செல்லவும் வசதியாக பிரத்யேக பேட்டரி ஆட்டோ வாகனத்தின் சாவியை ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சிவகணேஷ், கோவை அரசு மருத்துவமனை டீன் டாக்டர் நிர்மலாவிடம் வழங்கினார்.

இது குறித்து டீன் டாக்டர் நிர்மலா கூறுகையில், "மருத்துவமனை வளாகத்திற்கு மிகவும் தேவையான இந்த வாகனத்தை வழங்கிய ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் மற்றும் அதன் நிர்வாக இயக்குனருக்கு நன்றிகளை தெரிவிக்கிறேன்," என்றார்.

தொடர்ந்து பேசிய ஸ்ரீதேவி சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் சிவ கணேஷ், "மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகளுக்கு தினமும் இலவச உணவு வழங்கி வரும் சேவையை ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்த பேட்டரி வாகனத்தை அரசு மருத்துவமனை பயன்பாட்டுக்கு வழங்கியுள்ளோம்," என்றார்.



நிகழ்வின் முடிவில், அரசு மருத்துவமனைக்கு வந்திருந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு சிவ கணேஷ் மதிய உணவு வழங்கினார்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...