கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி வாகனத்தை வழங்கியுள்ளது. நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சிவ கணேஷ் இந்த வாகனத்தை மருத்துவமனை டீன் டாக்டர் நிர்மலாவிடம் ஒப்படைத்தார்.


கோவை: கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகம் செய்வதற்கென பிரத்யேக பேட்டரி வாகனத்தை ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது.

கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு உணவு வழங்கியதுடன், கொரோனா நிதியாக முதன் முதலாக அரசுக்கு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சிவ கணேஷ். கோவை மட்டுமின்றி அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லும் கோவை அரசு மருத்துவமனைக்கு புதிய பேட்டரி வாகனத்தை ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது.



மருத்துவமனையின் உள்ளே பெரிய உணவு பாத்திரங்களை கொண்டு செல்வதற்கும், மருந்துகளை ஆங்காங்கே உள்ள மருத்துவ பிரிவுகளுக்கு எடுத்து செல்லவும் வசதியாக பிரத்யேக பேட்டரி ஆட்டோ வாகனத்தின் சாவியை ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சிவகணேஷ், கோவை அரசு மருத்துவமனை டீன் டாக்டர் நிர்மலாவிடம் வழங்கினார்.

இது குறித்து டீன் டாக்டர் நிர்மலா கூறுகையில், "மருத்துவமனை வளாகத்திற்கு மிகவும் தேவையான இந்த வாகனத்தை வழங்கிய ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் மற்றும் அதன் நிர்வாக இயக்குனருக்கு நன்றிகளை தெரிவிக்கிறேன்," என்றார்.

தொடர்ந்து பேசிய ஸ்ரீதேவி சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் சிவ கணேஷ், "மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகளுக்கு தினமும் இலவச உணவு வழங்கி வரும் சேவையை ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்த பேட்டரி வாகனத்தை அரசு மருத்துவமனை பயன்பாட்டுக்கு வழங்கியுள்ளோம்," என்றார்.



நிகழ்வின் முடிவில், அரசு மருத்துவமனைக்கு வந்திருந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு சிவ கணேஷ் மதிய உணவு வழங்கினார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...