கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி வாகனத்தை வழங்கியுள்ளது. நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சிவ கணேஷ் இந்த வாகனத்தை மருத்துவமனை டீன் டாக்டர் நிர்மலாவிடம் ஒப்படைத்தார்.


கோவை: கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகம் செய்வதற்கென பிரத்யேக பேட்டரி வாகனத்தை ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது.

கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு உணவு வழங்கியதுடன், கொரோனா நிதியாக முதன் முதலாக அரசுக்கு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சிவ கணேஷ். கோவை மட்டுமின்றி அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லும் கோவை அரசு மருத்துவமனைக்கு புதிய பேட்டரி வாகனத்தை ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது.



மருத்துவமனையின் உள்ளே பெரிய உணவு பாத்திரங்களை கொண்டு செல்வதற்கும், மருந்துகளை ஆங்காங்கே உள்ள மருத்துவ பிரிவுகளுக்கு எடுத்து செல்லவும் வசதியாக பிரத்யேக பேட்டரி ஆட்டோ வாகனத்தின் சாவியை ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சிவகணேஷ், கோவை அரசு மருத்துவமனை டீன் டாக்டர் நிர்மலாவிடம் வழங்கினார்.

இது குறித்து டீன் டாக்டர் நிர்மலா கூறுகையில், "மருத்துவமனை வளாகத்திற்கு மிகவும் தேவையான இந்த வாகனத்தை வழங்கிய ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் மற்றும் அதன் நிர்வாக இயக்குனருக்கு நன்றிகளை தெரிவிக்கிறேன்," என்றார்.

தொடர்ந்து பேசிய ஸ்ரீதேவி சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் சிவ கணேஷ், "மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகளுக்கு தினமும் இலவச உணவு வழங்கி வரும் சேவையை ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்த பேட்டரி வாகனத்தை அரசு மருத்துவமனை பயன்பாட்டுக்கு வழங்கியுள்ளோம்," என்றார்.



நிகழ்வின் முடிவில், அரசு மருத்துவமனைக்கு வந்திருந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு சிவ கணேஷ் மதிய உணவு வழங்கினார்.

Newsletter

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...