தீபாவளியை முன்னிட்டு கோவை கடல் கன்னி கண்காட்சி நவம்பர் 3 வரை நீட்டிப்பு

கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெறும் கடல் கன்னி கண்காட்சி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Coimbatore: கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்று வரும் கடல் கன்னி பொருட்காட்சி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 3 ஆம் தேதி வரை கண்காட்சி நீட்டிக்கப்பட்டுள்ளதாக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும் இந்தக் கண்காட்சியை கோவை மக்கள் மட்டுமின்றி வெளியூர் மக்களும் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.



கண்காட்சியில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட வண்ண மீன்கள் உலாவரும் செயற்கை கடல் குகை, பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த நான்கு கடல் கன்னிகளின் சாகசங்கள், மீன் உடையுடன் உலாவரும் கடல் கன்னிகள் ஆகியவை சிறப்பு கவர்ச்சிகளாக உள்ளன. குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் கடல் கன்னிகளுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கண்காட்சியில் 50க்கும் மேற்பட்ட வர்த்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மக்கள் மட்டுமின்றி பெங்களூரு, பாலக்காடு போன்ற பிற மாநிலங்களிலிருந்தும் மக்கள் வந்து பார்வையிட்டு வருகின்றனர்.



வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட சுழலும் ராட்டினம், குழந்தைகள் விளையாட்டு அரங்கம், பனி கூடம் (Snow World), பேய் வீடு, 3D காட்சிகள், பலூன் கேம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களும் பொதுமக்களை பெரிதும் கவர்ந்துள்ளன.

கண்காட்சி பங்குதாரர் சந்திரசேகர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் அபுதாகிர் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கோவை மக்களின் விருப்பத்தின் பேரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 3 ஆம் தேதி வரை கண்காட்சி நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வருட தீபாவளியை கடல் கன்னி பொருட்காட்சியுடன் இணைந்து கொண்டாட அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்," என்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...