தீபாவளியை முன்னிட்டு கோவை கடல் கன்னி கண்காட்சி நவம்பர் 3 வரை நீட்டிப்பு

கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெறும் கடல் கன்னி கண்காட்சி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Coimbatore: கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்று வரும் கடல் கன்னி பொருட்காட்சி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 3 ஆம் தேதி வரை கண்காட்சி நீட்டிக்கப்பட்டுள்ளதாக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும் இந்தக் கண்காட்சியை கோவை மக்கள் மட்டுமின்றி வெளியூர் மக்களும் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.



கண்காட்சியில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட வண்ண மீன்கள் உலாவரும் செயற்கை கடல் குகை, பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த நான்கு கடல் கன்னிகளின் சாகசங்கள், மீன் உடையுடன் உலாவரும் கடல் கன்னிகள் ஆகியவை சிறப்பு கவர்ச்சிகளாக உள்ளன. குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் கடல் கன்னிகளுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கண்காட்சியில் 50க்கும் மேற்பட்ட வர்த்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மக்கள் மட்டுமின்றி பெங்களூரு, பாலக்காடு போன்ற பிற மாநிலங்களிலிருந்தும் மக்கள் வந்து பார்வையிட்டு வருகின்றனர்.



வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட சுழலும் ராட்டினம், குழந்தைகள் விளையாட்டு அரங்கம், பனி கூடம் (Snow World), பேய் வீடு, 3D காட்சிகள், பலூன் கேம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களும் பொதுமக்களை பெரிதும் கவர்ந்துள்ளன.

கண்காட்சி பங்குதாரர் சந்திரசேகர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் அபுதாகிர் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கோவை மக்களின் விருப்பத்தின் பேரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 3 ஆம் தேதி வரை கண்காட்சி நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வருட தீபாவளியை கடல் கன்னி பொருட்காட்சியுடன் இணைந்து கொண்டாட அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்," என்றனர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...