கோவை உப்பிலிபாளையம் சந்திப்பில் புதிய கால்வாய் அமைப்பு: ஆட்சியர், ஆணையர் ஆய்வு

கோவை உப்பிலிபாளையம் சந்திப்பில் மழைநீர் தேக்கத்தை தடுக்க புதிய கால்வாய் அமைக்கும் பணியை ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் ஆணையர் சிவகுரு பிரபாகரன் நேரில் ஆய்வு செய்தனர். மழைக்கால பாதிப்புகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.


Coimbatore: கோவை உப்பிலிபாளையம் சந்திப்பில் அவிநாசி மேம்பாலம் மற்றும் வஉசி பூங்கா பகுதிகளில் தேங்கும் மழைநீரை அகற்றுவதற்காக புதிதாக கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணியை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் இன்று (அக்டோபர் 16) நேரில் ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கோவை மாநகர் பகுதியில் மழைநீர் தேங்குவது குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். அவிநாசி மேம்பாலம் சுரங்கப்பாதை அருகே ஏற்கனவே கிரில் அமைத்து மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறினார்.



அவிநாசி சுரங்கப்பாதை, சிவானந்தா காலனி ஏஆர்சி சுரங்கப்பாதை, செம்மொழி பூங்கா ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்காமல் தடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் தெரிவித்தார். புதிதாக அமைக்கப்படும் கால்வாய் மூலம் அவிநாசி மேம்பாலம் சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளதாகவும், ஏஆர்சி மேம்பாலத்தின் கீழுள்ள சாலையிலும் இதேபோன்ற வாய்க்கால் அமைக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

இந்தப் பணி சுமார் 15 நாட்கள் நீடிக்கும் என்றும், தற்போது மழைக்காலம் என்பதால் இரவு நேரங்களிலும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். அடுத்த ஆண்டு பருவமழை காலத்தில் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் இருக்கும் என்று உறுதியளித்தார்.

சாக்கடை கால்வாய்களில் அடைப்புகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், குளங்கள் மற்றும் கால்வாய்களில் இருந்து தூர் அகற்றப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார். எதிர்காலத்தில் கனமழை பெய்தால் குடியிருப்புப் பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டால், பொதுமக்களை தங்க வைக்க கோவை மாநகராட்சி பகுதியில் 76 மையங்களும், புறநகர் பகுதியில் 66 மையங்களும் தயார் நிலையில் உள்ளதாகக் கூறினார்.

மழைநீர் நொய்யல் ஆற்றில் உள்ளே செல்லும் பாதை மற்றும் வெளியேறும் பாதை ஆகியவற்றை ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் 24 மணி நேரமும் வாகன வசதிகள் தயார் நிலையில் உள்ளதாகவும், தேவைக்கேற்ப அவற்றைப் பயன்படுத்துவோம் என்றும் ஆட்சியர் கூறினார்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...