வடகிழக்கு பருவமழை: தயார் நிலையில் இருக்க கோவை மாநகராட்சி ஆணையர் உத்தரவு

கோவை மாநகராட்சி ஆணையர் M சிவகுரு பிரபாகரன் தலைமையில் வடகிழக்கு பருவமழை தயார்நிலை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.


Coimbatore: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், ஆர்.எஸ்புரம் கலையரங்க கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை தொடர்பான நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் M சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் பேசுகையில், தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருவதால், கோவை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் மழை தொடர்பான பணிகளை அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்றார்.

மழைநீரை வெளியேற்றும் மின் மோட்டார்கள், மரம் அறுக்கும் இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும், நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். பழுதடைந்த பள்ளிக் கட்டிடங்கள், தடுப்புச்சுவர்களை பாதுகாப்பாக அகற்றவும், சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும் உத்தரவிட்டார்.

சாலைகளில் தேங்கும் மழைநீர் விரைவாக வெளியேற, வடிகால்களின் பக்கவாட்டில் சிறிய துளைகள் இடவேண்டும் என்றார். மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் சுகாதாரத்தை பேண, விரைவான தூய்மைப் பணிகளையும், தேவையான இடங்களில் மருத்துவ முகாம்களையும் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தாழ்வான பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக மீட்டு முகாம்களில் தங்க வைத்து, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்றார். மழை தொடர்பான பொதுமக்களின் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மாநகர நல அலுவலர் (பொ) மருபூபதி, செயற்பொறியாளர்கள் இளங்கோவன், கருப்பசாமி, நகரமைப்பு அலுவலர் குமார், மண்டல உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...