கோவையில் நில மோசடி குற்றச்சாட்டு: பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் மறுப்பு

கோவை கீரணத்தம் பகுதியில் நில மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். குற்றச்சாட்டுகளை அபாண்டமானவை என்று கூறி, அரசியல் பின்னணி இருக்கலாம் எனக் குறிப்பிட்டார்.


Coimbatore: கோவை கீரணத்தம் பகுதியில் உள்ள நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் ராமசாமி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம், ஸ்ரீவாரி ரியல் எஸ்டேட் நிறுவனர் பகவான் தாஸ் ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக காளிகோனார் என்பவரின் வாரிசுதாரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்தனர்.

இந்நிலையில், இக்குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி செய்தியாளர்களிடம் பேசினார். குற்றச்சாட்டுகள் அனைத்தும் அபாண்டமானவை என்றும், தனக்கும் அந்த நிலத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும், இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகவும், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறினார்.

"இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால் அரசியல் பின்னணியோ அல்லது தொழில் போட்டியோ இருக்கலாம்," என்று ராமசாமி கருத்து தெரிவித்தார். புகார்தாரர்கள் தனது தந்தையின் பெயரை அவமதிக்கும் விதமாகப் பயன்படுத்துவதாகக் கூறிய அவர், இது குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர இருப்பதாகவும் தெரிவித்தார்.

30 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், தன் மீது எந்த ஒரு கறையும் இல்லை என்றும் ராமசாமி வலியுறுத்தினார். மேலும், குற்றச்சாட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள காலகட்டத்தில் தனக்கு 12 வயதும், அதிமுக எம்எல்ஏவுக்கு 10 வயதும்தான் இருந்திருக்கும் என்று சுட்டிக்காட்டினார்.

அதிமுக எம்எல்ஏவுடன் தான் முன்னாள் பங்குதாரர் என்றும், இருவரும் சேர்ந்து 7 ஆண்டுகளாகத் தொழில் செய்து வருவதாகவும் ராமசாமி தெரிவித்தார். இந்தப் பிரச்சினை தொடர்பாக புகார்தாரர்களுடன் நேருக்கு நேர் உட்கார்ந்து பேச தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...