கோவையில் நில மோசடி குற்றச்சாட்டு: பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் மறுப்பு

கோவை கீரணத்தம் பகுதியில் நில மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். குற்றச்சாட்டுகளை அபாண்டமானவை என்று கூறி, அரசியல் பின்னணி இருக்கலாம் எனக் குறிப்பிட்டார்.


Coimbatore: கோவை கீரணத்தம் பகுதியில் உள்ள நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் ராமசாமி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம், ஸ்ரீவாரி ரியல் எஸ்டேட் நிறுவனர் பகவான் தாஸ் ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக காளிகோனார் என்பவரின் வாரிசுதாரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்தனர்.

இந்நிலையில், இக்குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி செய்தியாளர்களிடம் பேசினார். குற்றச்சாட்டுகள் அனைத்தும் அபாண்டமானவை என்றும், தனக்கும் அந்த நிலத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும், இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகவும், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறினார்.

"இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால் அரசியல் பின்னணியோ அல்லது தொழில் போட்டியோ இருக்கலாம்," என்று ராமசாமி கருத்து தெரிவித்தார். புகார்தாரர்கள் தனது தந்தையின் பெயரை அவமதிக்கும் விதமாகப் பயன்படுத்துவதாகக் கூறிய அவர், இது குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர இருப்பதாகவும் தெரிவித்தார்.

30 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், தன் மீது எந்த ஒரு கறையும் இல்லை என்றும் ராமசாமி வலியுறுத்தினார். மேலும், குற்றச்சாட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள காலகட்டத்தில் தனக்கு 12 வயதும், அதிமுக எம்எல்ஏவுக்கு 10 வயதும்தான் இருந்திருக்கும் என்று சுட்டிக்காட்டினார்.

அதிமுக எம்எல்ஏவுடன் தான் முன்னாள் பங்குதாரர் என்றும், இருவரும் சேர்ந்து 7 ஆண்டுகளாகத் தொழில் செய்து வருவதாகவும் ராமசாமி தெரிவித்தார். இந்தப் பிரச்சினை தொடர்பாக புகார்தாரர்களுடன் நேருக்கு நேர் உட்கார்ந்து பேச தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...