கோவையில் நில மோசடி குற்றச்சாட்டு: பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் மறுப்பு

கோவை கீரணத்தம் பகுதியில் நில மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். குற்றச்சாட்டுகளை அபாண்டமானவை என்று கூறி, அரசியல் பின்னணி இருக்கலாம் எனக் குறிப்பிட்டார்.


Coimbatore: கோவை கீரணத்தம் பகுதியில் உள்ள நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் ராமசாமி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம், ஸ்ரீவாரி ரியல் எஸ்டேட் நிறுவனர் பகவான் தாஸ் ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக காளிகோனார் என்பவரின் வாரிசுதாரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்தனர்.

இந்நிலையில், இக்குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி செய்தியாளர்களிடம் பேசினார். குற்றச்சாட்டுகள் அனைத்தும் அபாண்டமானவை என்றும், தனக்கும் அந்த நிலத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும், இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகவும், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறினார்.

"இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால் அரசியல் பின்னணியோ அல்லது தொழில் போட்டியோ இருக்கலாம்," என்று ராமசாமி கருத்து தெரிவித்தார். புகார்தாரர்கள் தனது தந்தையின் பெயரை அவமதிக்கும் விதமாகப் பயன்படுத்துவதாகக் கூறிய அவர், இது குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர இருப்பதாகவும் தெரிவித்தார்.

30 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், தன் மீது எந்த ஒரு கறையும் இல்லை என்றும் ராமசாமி வலியுறுத்தினார். மேலும், குற்றச்சாட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள காலகட்டத்தில் தனக்கு 12 வயதும், அதிமுக எம்எல்ஏவுக்கு 10 வயதும்தான் இருந்திருக்கும் என்று சுட்டிக்காட்டினார்.

அதிமுக எம்எல்ஏவுடன் தான் முன்னாள் பங்குதாரர் என்றும், இருவரும் சேர்ந்து 7 ஆண்டுகளாகத் தொழில் செய்து வருவதாகவும் ராமசாமி தெரிவித்தார். இந்தப் பிரச்சினை தொடர்பாக புகார்தாரர்களுடன் நேருக்கு நேர் உட்கார்ந்து பேச தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...