கோவை மாநகராட்சியில் ரூ.3 முதல் 12 லட்சம் வரை வருவாய் கொண்டோருக்கு வட்டி மானியத்தில் வங்கிக் கடன்


கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களில் 100 வார்டு பகுதிகளில் மத்திய அரசின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தகுதியுடைய பயனாளிகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை வருவாய் கொண்ட பிரிவினருக்கு வட்டி மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி அளிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று தகவல் தெரிவித்தார்.

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் இதுகுறித்து தெரிவிக்கையில், “கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களில் 100 வார்டு பகுதிகளில் மத்திய அரசின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தகுதியுடைய பயனாளிகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்படி நகரப்பகுதிகளில் வசிக்கும் ஆண்டு வருமானம் 3 லட்சம் வரை உடைய நலிவடைந்த மக்களுக்கு 323 சதுர அடி உட்பரப்பு கொண்ட வீடுகட்ட ரூ.3 லட்சம் வரையும், ஆண்டு வருமானம் 3 லட்சம் முதல் 6 லட்சம் வரை உள்ள குறைந்த வருவாய் கொண்ட பிரிவினருக்கு 646 சதுர அடி உட்பரப்பு கொண்ட வீடுகட்டுவதற்கு ரூ.6 லட்சம் 20 ஆண்டு வரை 4 சதவிகித வட்டி மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவியும், ஆண்டு வருமானம் 6 லட்சம் முதல் 18 லட்சம் வரை வருவாய் கொண்ட பிரிவினருக்கு வீடுகட்டுவதற்கு ரூ.12 லட்சம் வரை 20 ஆண்டு வரை 3 சதவிகித வட்டி மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவியும் அளிக்கப்படும்.

மேலும், ஏற்கெனவே உள்ள வீட்டின் விரிவாக்கத்திற்கும், கட்டிமுடிக்கப்பட்ட வீட்டினை வாங்குவதற்கும், அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்குவதற்கும் இத்திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கப்படும்.

மேலும், கணக்கெடுப்பில் விடுபட்ட பயனாளிகள் உடனடியாக மாநகராட்சி மைய அலுவல தகவல் மையத்தை அனுகி, கொடுக்கப்படும் படிவத்தை பூர்த்தி செய்து அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், பயனாளிகள் விபரங்களுக்கு 94437 04002 என்ற எண்ணை அழைக்கவும்.” இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றம் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...