திருப்பூரில் குப்பை கொட்டும் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பூர் முதலிபாளையத்தில் குப்பை கொட்டுவதால் சுகாதார பிரச்னைகள் ஏற்படுவதாக கூறி, பொதுமக்கள் குப்பை லாரிகளை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். மாநகராட்சி அதிகாரிகள் உறுதிமொழி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியின் 60 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகளை முதலிபாளையம் பகுதியில் கொட்டுவதால் ஏற்படும் சுகாதார பிரச்னைகளை எதிர்த்து, பொதுமக்கள் குப்பை கொட்ட வந்த லாரிகளை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் தினசரி 600 டன் அளவிலான குப்பைகள் சேகரிக்கப்பட்டு, முதலிபாளையம் பகுதியில் உள்ள பயன்படுத்தப்படாத கல் குவாரி குழியில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதாகவும், சுவாசக் கோளாறு மற்றும் சரும நோய் பிரச்னைகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இந்த பிரச்னை குறித்து பலமுறை மாநகராட்சியில் புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.



இந்நிலையில், முதலிபாளையம் மற்றும் சென்னிமலை பாளையம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், குப்பை கொட்ட வந்த மாநகராட்சி லாரிகளை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள், குப்பை கொட்ட மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதால் இந்த பகுதியில் குப்பைகள் கொட்டப்படாது என உறுதியளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...