கோவையில் அதிமுக கழக செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம்

கோவை துடியலூர் அருகே வடமதுரை மற்றும் கேஸ் கம்பெனி பகுதியில் அதிமுக கழக செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.



கோவை: கோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை மற்றும் கேஸ் கம்பெனி பகுதியில் அதிமுக கழக செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.



வடமதுரையில் உள்ள எஸ்.எஸ் கமலேஷ் திருமண மண்டபத்தில் பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியம் மற்றும் நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியைச் சேர்ந்த கழக உறுப்பினர்களுக்கான கூட்டமும், கேஸ் கம்பெனி அருகே உள்ள தாரிகா மஹாலில் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி, எண்.4 வீரபாண்டி பேரூராட்சி, கோவை கூடலூர் நகராட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கான கூட்டமும் நடைபெற்றது.



இந்தக் கூட்டங்களில் கழக அமைப்புச் செயலாளரும் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.கே.செல்வராஜ், கோவை புறநகர் வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ வுமான ஓ.கே.சின்ராஜ், கழக செய்தி தொடர்பாளர் பேராசிரியர் கே.கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகளுக்கு கழக வளர்ச்சிப் பணிகள், மக்கள் பணிகள், அடையாள அட்டைகள் மற்றும் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து விளக்கமளிக்கப்பட்டது. பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கே.வி.என்.ஜெயராமன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இந்தக் கூட்டங்களில் மருத்துவர் அணி செயலாளர் டாக்டர்.துரைசாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் மணிகண்டன், மீனவர் அணி செயலாளர் ஜெகன், மகளிர் அணி செயலாளர் விமலா, பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் பூக்கடை ரவி, ஒன்றிய கவுன்சிலர் மாணிக்கம் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முதல் கூட்டத்தில் நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூர் கழக செயலாளர் ஆனந்தன், டியூகாஸ் முன்னாள் துணைத்தலைவர் செல்வராஜ், குருடம்பாளையம் ஊராட்சித்தலைவர் டி.ரவி, அசோகபுரம் ஊராட்சித்தலைவர் ரமேஷ், துணைத்தலைவர் ஆடிட்டர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இரண்டாவது கூட்டத்தில் இளைஞர் அணி இணை செயலாளர் சசிக்குமார், கோவை கூடலூர் நகராட்சி கழகச் செயலாளர் குருந்தாசலம், பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி கழகச் செயலாளர் ரகுநாதன், எண்:4 வீரபாண்டி பேரூராட்சி கழக செயலாளர் ராமதாஸ், கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் தனபால் உள்ளிட்ட பல்வேறு அளவிலான கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...