கோவையில் அதிமுக கழக செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம்

கோவை துடியலூர் அருகே வடமதுரை மற்றும் கேஸ் கம்பெனி பகுதியில் அதிமுக கழக செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.



கோவை: கோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை மற்றும் கேஸ் கம்பெனி பகுதியில் அதிமுக கழக செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.



வடமதுரையில் உள்ள எஸ்.எஸ் கமலேஷ் திருமண மண்டபத்தில் பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியம் மற்றும் நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியைச் சேர்ந்த கழக உறுப்பினர்களுக்கான கூட்டமும், கேஸ் கம்பெனி அருகே உள்ள தாரிகா மஹாலில் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி, எண்.4 வீரபாண்டி பேரூராட்சி, கோவை கூடலூர் நகராட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கான கூட்டமும் நடைபெற்றது.



இந்தக் கூட்டங்களில் கழக அமைப்புச் செயலாளரும் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.கே.செல்வராஜ், கோவை புறநகர் வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ வுமான ஓ.கே.சின்ராஜ், கழக செய்தி தொடர்பாளர் பேராசிரியர் கே.கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகளுக்கு கழக வளர்ச்சிப் பணிகள், மக்கள் பணிகள், அடையாள அட்டைகள் மற்றும் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து விளக்கமளிக்கப்பட்டது. பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கே.வி.என்.ஜெயராமன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இந்தக் கூட்டங்களில் மருத்துவர் அணி செயலாளர் டாக்டர்.துரைசாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் மணிகண்டன், மீனவர் அணி செயலாளர் ஜெகன், மகளிர் அணி செயலாளர் விமலா, பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் பூக்கடை ரவி, ஒன்றிய கவுன்சிலர் மாணிக்கம் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முதல் கூட்டத்தில் நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூர் கழக செயலாளர் ஆனந்தன், டியூகாஸ் முன்னாள் துணைத்தலைவர் செல்வராஜ், குருடம்பாளையம் ஊராட்சித்தலைவர் டி.ரவி, அசோகபுரம் ஊராட்சித்தலைவர் ரமேஷ், துணைத்தலைவர் ஆடிட்டர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இரண்டாவது கூட்டத்தில் இளைஞர் அணி இணை செயலாளர் சசிக்குமார், கோவை கூடலூர் நகராட்சி கழகச் செயலாளர் குருந்தாசலம், பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி கழகச் செயலாளர் ரகுநாதன், எண்:4 வீரபாண்டி பேரூராட்சி கழக செயலாளர் ராமதாஸ், கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் தனபால் உள்ளிட்ட பல்வேறு அளவிலான கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

Newsletter

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...

“நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” - கோவையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வந்தபோது, “நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” உள்ள...

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...