கோவையில் தூய்மை பணியாளர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி

கோவையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த அமைச்சர் செந்தில் பாலாஜி, சிவானந்தா காலனி - சாய்பாபா காலனி ரயில்வே பாலத்தின் கீழ் தூய்மை பணியாளர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.


Coimbatore: கோவையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. மழைநீருடன் குப்பைகள் கழிவு நீர் சேர்ந்து பல்வேறு பகுதிகள் சேறும் சகதியுமாய் குப்பைகளுடன் காட்சியளிக்கின்றன. இந்த நிலையை சரிசெய்யும் பணிகளில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ள இன்று (அக்டோபர் 15) வருகை புரிந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, சிவானந்தா காலனி - சாய்பாபா காலனி ரயில்வே பாலத்திற்கு கீழ் மழை நீர் தேங்கும் பகுதியை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, அங்கு தூய்மை பணிகள் மேற்கொண்டு வந்த மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் புகைப்படம் எடுத்து கொள்வதற்கு விருப்பம் தெரிவித்தனர். அவர்களின் விருப்பத்தை ஏற்று அமைச்சர் செந்தில் பாலாஜி தூய்மை பணியாளர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.

குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த ரயில்வே பாலத்திற்கு அடியில் நேற்றும் நேற்று முன்தினமும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மழை நீரில் சிக்கிக்கொண்டன. இது பகுதி மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சரின் இந்த ஆய்வு பயணம், கோவையில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் கண்டறிந்து, தேவையான நடவடிக்கைகளை விரைவாக எடுப்பதற்கான முயற்சியாக பார்க்கப்படுகிறது. மேலும், தூய்மை பணியாளர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது, அவர்களின் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் அளிப்பதாகவும் கருதப்படுகிறது.

Newsletter

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...

திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...