கோவை மாவட்டத்தில் தனிப்படை சோதனை: 183 வழக்குகள் பதிவு, 18 பேர் கைது

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களைத் தடுக்க இரண்டு நாள் தனிப்படை சோதனை நடத்தப்பட்டது. 183 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 18 பேர் கைது செய்யப்பட்டனர். கஞ்சா, சட்டவிரோத மது விற்பனை, புகையிலை பொருட்கள் மற்றும் லாட்டரி விற்பனை போன்ற குற்றங்கள் கண்டறியப்பட்டன.


கோவை: கோவை மாவட்டத்தில் சட்டவிரோத செயல்கள் மற்றும் குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் தனிப்படைகள் மூலம் இரண்டு நாள் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் 183 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதோடு, 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் போதைப் பொருள்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K. கார்த்திகேயன் தலைமையில் கடந்த அக்டோபர் 12 மற்றும் 13 ஆகிய இரண்டு நாட்களில் மாவட்டம் முழுவதும் திடீர் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் 86 தனிப்படைகள் மூலம் சுமார் 400 காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர். கடந்த 15 ஆண்டுகளில் கஞ்சா வழக்குகளில் சம்பந்தப்பட்ட சுமார் 2,000 பழைய குற்றவாளிகளை கண்காணிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சோதனையின் போது, 22 கஞ்சா குற்றவாளிகள் மீது 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவர்களிடமிருந்து சுமார் 28 கிலோ 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக 84 பேர் மீது 83 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்ததாக 38 பேர் மீது 38 வழக்குகளும், சட்டவிரோத லாட்டரி விற்பனை செய்ததாக 46 பேர் மீது 46 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. மேலும், குற்ற வழக்குகளில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சோதனை நடவடிக்கை மூலம், கோவை மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களைக் கட்டுப்படுத்தவும், குற்றங்களைத் தடுக்கவும் காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருவது தெரிய வந்துள்ளது.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...