கன மழை காரணமாக கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நாளை (15.10.2024) நடைபெற இருந்த மேயரின் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கன மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் கவனத்திற்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை (15.10.2024) செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்களின் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கன மழையின் காரணமாக நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டம் வழக்கமாக காலை 11.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை நடைபெறும். இக்கூட்டத்தில் கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள பொதுமக்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை மேயரிடம் நேரடியாக சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும்.

பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்து பயன்பெற முடியும். இந்த மனுக்களின் மீது துறைசார்ந்த மாநகராட்சி அலுவலர்களால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கன மழை காரணமாக இந்த வாரம் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அடுத்த வாரம் நடைபெறும் கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...