இஸ்லாமியர்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டியது எங்கள் கடமை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

கோவை கோட்டைமேடு பகுதியில் மன்பஉல் உலூம் மெட்ரிகுலேஷன் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தும் விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உரையாற்றினார். இஸ்லாமியர்களின் பங்களிப்பை பாராட்டினார்.


Coimbatore: கோவை கோட்டைமேடு பகுதியில் இயங்கி வரும் மன்பஉல் உலூம் மெட்ரிகுலேஷன் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தும் துவக்க விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபிய்யா ஜமாத் தலைவர் இனாயத்துல்லாஹ் தலைமை தாங்கினார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். மேலும், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் Kranthi Kumar Pati, கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.



அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது உரையில், தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, இந்தப் பள்ளியை தரம் உயர்த்தி இருப்பதாகவும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் கல்வியை தரத்தோடு வழங்க வேண்டும் என்று எண்ணக்கூடியவர் என்றும் கூறினார். அதன்படி இந்தப் பள்ளி நிர்வாகம் தரமான கல்வியை தொடர்ந்து வழங்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.



அமைச்சர் மேலும் பேசுகையில், "நாடு விடுதலை பெற்றதற்கு முக்கிய காரணமாக விளங்கிக் கொண்டிருப்பவர்கள் இஸ்லாமியர்கள். அவர்களுக்கு என்றும் நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டியது எங்களது கடமை" என்று குறிப்பிட்டார். மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய அவர், பெற்றவர்களுக்கு நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும் என்றும், ஆசிரியர்கள் கற்பிப்பதை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்றும் கூறினார்.



ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபிய்யா ஜமாத், சிறப்பான கல்வி நிறுவனத்தை உருவாக்கி இருப்பதாக பாராட்டிய அமைச்சர், ஜமாத்தின் கீழ் கல்லூரி வரவேண்டும் என்றும், அதற்காக ஒரு தோழனாக இருந்து முழு முயற்சியோடு செயல்படுவேன் என்று உறுதி அளித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...