இஸ்லாமியர்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டியது எங்கள் கடமை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

கோவை கோட்டைமேடு பகுதியில் மன்பஉல் உலூம் மெட்ரிகுலேஷன் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தும் விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உரையாற்றினார். இஸ்லாமியர்களின் பங்களிப்பை பாராட்டினார்.


Coimbatore: கோவை கோட்டைமேடு பகுதியில் இயங்கி வரும் மன்பஉல் உலூம் மெட்ரிகுலேஷன் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தும் துவக்க விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபிய்யா ஜமாத் தலைவர் இனாயத்துல்லாஹ் தலைமை தாங்கினார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். மேலும், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் Kranthi Kumar Pati, கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.



அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது உரையில், தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, இந்தப் பள்ளியை தரம் உயர்த்தி இருப்பதாகவும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் கல்வியை தரத்தோடு வழங்க வேண்டும் என்று எண்ணக்கூடியவர் என்றும் கூறினார். அதன்படி இந்தப் பள்ளி நிர்வாகம் தரமான கல்வியை தொடர்ந்து வழங்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.



அமைச்சர் மேலும் பேசுகையில், "நாடு விடுதலை பெற்றதற்கு முக்கிய காரணமாக விளங்கிக் கொண்டிருப்பவர்கள் இஸ்லாமியர்கள். அவர்களுக்கு என்றும் நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டியது எங்களது கடமை" என்று குறிப்பிட்டார். மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய அவர், பெற்றவர்களுக்கு நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும் என்றும், ஆசிரியர்கள் கற்பிப்பதை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்றும் கூறினார்.



ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபிய்யா ஜமாத், சிறப்பான கல்வி நிறுவனத்தை உருவாக்கி இருப்பதாக பாராட்டிய அமைச்சர், ஜமாத்தின் கீழ் கல்லூரி வரவேண்டும் என்றும், அதற்காக ஒரு தோழனாக இருந்து முழு முயற்சியோடு செயல்படுவேன் என்று உறுதி அளித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...