குடிநீர் விநியோகம் குறித்து தவறான தகவல் - சூலூர் தென்றல் நகர் மக்கள் குற்றச்சாட்டு

சூலூர் கலங்கள் பஞ்சாயத்து தென்றல் நகர் மக்கள் குடிநீர் விநியோகம் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் தவறான தகவல் அளித்ததாக குற்றம்சாட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அடிப்படை வசதிகள் கோரி போராட்ட எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Coimbatore: சூலூர் கலங்கள் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தென்றல் நகர் பொதுமக்கள் குடிநீர் விநியோகம் தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் தவறான தகவல் அளித்ததாக குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் Kranthi Kumar Pati அவர்களிடம் மனு அளித்துள்ளனர்.

தென்றல் நகர் மக்கள் ஏற்கனவே குடிநீர் வசதி, சாலை வசதி, மழைநீர் வடிகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர். அந்த மனுவின் அடிப்படையில், தற்போது முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக வட்டார வளர்ச்சி அலுவலர் தவறான பதில் அளித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.



இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தை பரிசீலித்து உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி 50க்கும் மேற்பட்ட தென்றல் நகர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் மனு அளித்துள்ளனர்.

மனு அளித்த பொதுமக்கள் கூறுகையில், "அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரியும், எங்கள் பகுதியை சூலூர் பேரூராட்சியுடன் இணைக்கக் கோரியும் பல முறை மனு அளித்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உடனடியாக எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினர்.

மேலும், அவர்கள் தங்களது கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறினால், சாலை மறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை முன்னெடுப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...