குடிநீர் விநியோகம் குறித்து தவறான தகவல் - சூலூர் தென்றல் நகர் மக்கள் குற்றச்சாட்டு

சூலூர் கலங்கள் பஞ்சாயத்து தென்றல் நகர் மக்கள் குடிநீர் விநியோகம் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் தவறான தகவல் அளித்ததாக குற்றம்சாட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அடிப்படை வசதிகள் கோரி போராட்ட எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Coimbatore: சூலூர் கலங்கள் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தென்றல் நகர் பொதுமக்கள் குடிநீர் விநியோகம் தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் தவறான தகவல் அளித்ததாக குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் Kranthi Kumar Pati அவர்களிடம் மனு அளித்துள்ளனர்.

தென்றல் நகர் மக்கள் ஏற்கனவே குடிநீர் வசதி, சாலை வசதி, மழைநீர் வடிகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர். அந்த மனுவின் அடிப்படையில், தற்போது முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக வட்டார வளர்ச்சி அலுவலர் தவறான பதில் அளித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.



இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தை பரிசீலித்து உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி 50க்கும் மேற்பட்ட தென்றல் நகர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் மனு அளித்துள்ளனர்.

மனு அளித்த பொதுமக்கள் கூறுகையில், "அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரியும், எங்கள் பகுதியை சூலூர் பேரூராட்சியுடன் இணைக்கக் கோரியும் பல முறை மனு அளித்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உடனடியாக எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினர்.

மேலும், அவர்கள் தங்களது கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறினால், சாலை மறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை முன்னெடுப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...