குடிநீர் விநியோகம் குறித்து தவறான தகவல் - சூலூர் தென்றல் நகர் மக்கள் குற்றச்சாட்டு

சூலூர் கலங்கள் பஞ்சாயத்து தென்றல் நகர் மக்கள் குடிநீர் விநியோகம் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் தவறான தகவல் அளித்ததாக குற்றம்சாட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அடிப்படை வசதிகள் கோரி போராட்ட எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Coimbatore: சூலூர் கலங்கள் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தென்றல் நகர் பொதுமக்கள் குடிநீர் விநியோகம் தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் தவறான தகவல் அளித்ததாக குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் Kranthi Kumar Pati அவர்களிடம் மனு அளித்துள்ளனர்.

தென்றல் நகர் மக்கள் ஏற்கனவே குடிநீர் வசதி, சாலை வசதி, மழைநீர் வடிகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர். அந்த மனுவின் அடிப்படையில், தற்போது முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக வட்டார வளர்ச்சி அலுவலர் தவறான பதில் அளித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.



இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தை பரிசீலித்து உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி 50க்கும் மேற்பட்ட தென்றல் நகர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் மனு அளித்துள்ளனர்.

மனு அளித்த பொதுமக்கள் கூறுகையில், "அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரியும், எங்கள் பகுதியை சூலூர் பேரூராட்சியுடன் இணைக்கக் கோரியும் பல முறை மனு அளித்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உடனடியாக எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினர்.

மேலும், அவர்கள் தங்களது கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறினால், சாலை மறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை முன்னெடுப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...