பொள்ளாச்சியில் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பிரம்மாண்ட வள்ளி கும்மி அரங்கேற்றம்

பொள்ளாச்சி அருகே 10 நெம்பர் முத்தூரில் சமுதாய நல்லிணக்கம், பெண்கள் உடல்நலம் மற்றும் பாரம்பரிய கலையை வலியுறுத்தி 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற வள்ளி கும்மி அரங்கேற்றம் நடைபெற்றது.


Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள 10 நெம்பர் முத்தூரில் காராள வம்ச கலை சங்கம் குழு சார்பில் பிரம்மாண்ட வள்ளி கும்மி அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்டம் குறித்து இளைய தலைமுறையினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், சமுதாய நல்லிணக்கத்தை வலியுறுத்தியும், பெண்கள் உடல் நலம் பேணிக்காக்கவும் நடத்தப்பட்டது. பங்கேற்பாளர்கள் முருகபெருமாள், வள்ளி திருமணம் போன்ற பாரம்பரிய கதைகளை நினைவு கூறும் வகையில் வள்ளி கும்மி நிகழ்ச்சியை அரங்கேற்றினர்.



நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் நித்தியானந்தன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பொள்ளாச்சி பகுதியில் காராள வம்ச கலைச்சங்கம் சார்பில் 4000க்கும் மேற்பட்டவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்களின் உடல்நலம், மனநலம் பேணி காக்கப்படுகிறது. ஓராண்டுக்கு முன்பு பயிற்சி எடுத்தவர்கள் உடலில் இருந்த குறைபாடுகள் நீங்கியுள்ளதாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்," என்றார்.

மேலும் அவர், "நமது கலாச்சாரம், பண்பாட்டை பிரதிபலிக்கின்ற வகையில் விளங்கும் வள்ளிக்கும்மியை மீட்டெடுத்து ஒரே இடத்தில் பதினாறாயிரம் பேரை அரங்கேற்றம் செய்து உலக சாதனை படைத்தனர். தமிழகம் மட்டுமல்லாது வெளிநாட்டினருக்கும் இந்த பயிற்சி சென்று கொண்டிருக்கிறது. கட்சி பாகுபாடு இல்லாமலும், குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டுமில்லாமல் கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் இந்த வள்ளி கும்மியை கற்று வருகின்றனர்," என்று தெரிவித்தார்.

"அரசியல் ரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் பிரிந்து கிடக்கும் மக்களிடையே ஒற்றுமை ஏற்பட்டு சமுதாய நல்லிணக்கத்திற்கு ஒரு வழியாக வள்ளி கும்மி மாறிக் கொண்டிருக்கிறது," என்று நித்தியானந்தன் கூறினார்.

Newsletter

கோவை PPG தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை PPG தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி...

திருநங்கை உரிமைப் போராளி கல்கி சுப்ரமணியம் தேசிய திருநங்கைகள் குழுவிலிருந்து ராஜினாமா

திருநங்கை உரிமைப் போராளி கல்கி சுப்ரமணியம், திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்த மசோதா 2026-ஐ எதிர்த்து தேசிய திரு...

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மண்டல அலுவலர்கள் பயிற்சி நிகழ்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக 10 தொகுதிகளுக்கான 366 மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்க...

T20 உலகக்கோப்பை வீரர் சஞ்சு சாம்சன் கோவை ADISSIA நிறுவனத்தின் Brand Ambassador ஆனார்

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், கோவையைச் சேர...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...