கோவை PPG தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை PPG தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிலம்பம், skating செய்தவாறு பங்கேற்றனர். வாக்குவீரன் இருவாச்சி பறவையும் இடம்பெற்றது.


Coimbatore: ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை PPG தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி இன்று கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்றது.

வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அரசு சார்பிலும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் சார்பிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவை PPG தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் இந்த வாக்கத்தான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த பேரணியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடியும், சிலம்பம் மற்றும் skating செய்தவாறும் பேரணி மேற்கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் இந்த வாக்கத்தான் நிகழ்வில் தேர்தல் அடையாளச் சின்னமாக அறிமுகப்படுத்தப்பட்ட வாக்குவீரன் இருவாச்சி பறவையும் இடம்பெற்றிருந்தது.

தேர்தல் நாளன்று அனைவரும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என்றும், முதல் முறை வாக்களிப்பவர்கள் நன்கு சிந்தித்து கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என்றும் பேரணியில் பங்கேற்ற பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் தெரிவித்தனர். அப்போதுதான் சிறந்த முதல்வரைத் தேர்ந்தெடுக்க முடியும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் இளைஞர்களிடையே வாக்குரிமையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...