பில்லூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்வு: தொடர் கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டம் மற்றும் மலைப்பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் பில்லூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 919 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட மலை மாவட்டங்களிலும் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கோவை மாவட்டத்தின் முக்கிய அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மேட்டுப்பாளையம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பில்லூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடியாக உயர்ந்துள்ளது. கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக மேட்டுப்பாளையம் அடுத்துள்ள பில்லூர் அணை இருந்து வருகிறது.

நீலகிரி மாவட்டம் மற்றும் கேரள பகுதிகளில் பெய்யும் மழை நீரை ஆதாரமாகக் கொண்டு பில்லூர் அணை உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 100 அடி ஆகும். நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் இன்று (அக்டோபர் 13) காலை 6 மணி நிலவரப்படி 91.50 அடியாக உள்ளது.

மேலும் அணைக்கு வினாடிக்கு 919 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி அணையிலிருந்து நீர் திறப்பு ஏதுமில்லை. இன்று காலை 6 மணி நிலவரப்படி குந்தாவில் 37, கெத்தையில் 46, பரளியில் 28, பில்லூர் அணை பகுதியில் 21, அவலாஞ்சி பகுதியில் 15 மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

நேற்றிரவு (அக்டோபர் 12) 9 மணி நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 86.50 அடியாக இருந்த நிலையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி தற்போது அணையின் நீர் மட்டம் 91.50 அடியாக ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது.

மேலும் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...