அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை புனரமைப்பு: நிதி பற்றாக்குறை காரணமாக தாமதம் - அமைச்சர் சாமிநாதன்

உடுமலை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புனரமைக்க 120 கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும், தற்போது நிதி பற்றாக்குறை காரணமாக திட்டம் தாமதமாகியுள்ளதாகவும் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார். இதனால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் எரி சாராய உற்பத்தியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பே. சாமிநாதன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சு. கயல்விழி செல்வராஜும் கலந்து கொண்டார்.

தற்போது வடிப்பாலையின் மூலப்பொருளான 3,507 மெட்ரிக் டன் கழிவுப்பாக இருப்பில் உள்ளதாகவும், இதன் மூலம் 7,89,075 லிட்டர் எரி சாராயம் உற்பத்தி செய்யப்பட்டு தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணையத்திற்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.



செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சாமிநாதன், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை முழுமையாக இயக்க சுமார் 120 கோடி ரூபாய் தேவைப்படுவதாகக் கூறினார். பல ஆண்டுகளாக இயந்திரங்கள் பழுதடைந்து, தேய்மானம் அடைந்துள்ளதால் புதிதாக மாற்றி அமைக்க வேண்டியுள்ளதாகவும், தற்போதைய நிதி பற்றாக்குறை காரணமாக ஆலையை பராமரிக்க முடியவில்லை எனவும் தெரிவித்தார்.

நிதி கிடைக்கும் பட்சத்தில் படிப்படியாக மீண்டும் கரும்பு அரவையை செய்வதற்கான வாய்ப்பு உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

கடந்த சில மாதங்களாக அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயந்திரங்கள் பழுது காரணமாக அரவை நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஆலைக்கு நிதி ஒதுக்க வேண்டுமென்று பல்வேறு விவசாயிகள் சங்கங்கள் சார்பில் பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.

அமைச்சர் சாமிநாதன் தற்போது நிதி இல்லை என்று கூறியதற்கு விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆலையை விரைவில் புனரமைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...