அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை புனரமைப்பு: நிதி பற்றாக்குறை காரணமாக தாமதம் - அமைச்சர் சாமிநாதன்

உடுமலை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புனரமைக்க 120 கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும், தற்போது நிதி பற்றாக்குறை காரணமாக திட்டம் தாமதமாகியுள்ளதாகவும் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார். இதனால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் எரி சாராய உற்பத்தியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பே. சாமிநாதன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சு. கயல்விழி செல்வராஜும் கலந்து கொண்டார்.

தற்போது வடிப்பாலையின் மூலப்பொருளான 3,507 மெட்ரிக் டன் கழிவுப்பாக இருப்பில் உள்ளதாகவும், இதன் மூலம் 7,89,075 லிட்டர் எரி சாராயம் உற்பத்தி செய்யப்பட்டு தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணையத்திற்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.



செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சாமிநாதன், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை முழுமையாக இயக்க சுமார் 120 கோடி ரூபாய் தேவைப்படுவதாகக் கூறினார். பல ஆண்டுகளாக இயந்திரங்கள் பழுதடைந்து, தேய்மானம் அடைந்துள்ளதால் புதிதாக மாற்றி அமைக்க வேண்டியுள்ளதாகவும், தற்போதைய நிதி பற்றாக்குறை காரணமாக ஆலையை பராமரிக்க முடியவில்லை எனவும் தெரிவித்தார்.

நிதி கிடைக்கும் பட்சத்தில் படிப்படியாக மீண்டும் கரும்பு அரவையை செய்வதற்கான வாய்ப்பு உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

கடந்த சில மாதங்களாக அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயந்திரங்கள் பழுது காரணமாக அரவை நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஆலைக்கு நிதி ஒதுக்க வேண்டுமென்று பல்வேறு விவசாயிகள் சங்கங்கள் சார்பில் பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.

அமைச்சர் சாமிநாதன் தற்போது நிதி இல்லை என்று கூறியதற்கு விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆலையை விரைவில் புனரமைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...