உடுமலை அருகே இடிமின்னலுடன் கனமழை: வீட்டின் மேற்கூரையில் மின்னல் தாக்கி 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உரல்பட்டி கிராமத்தில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. ஒரு வீட்டின் மேற்கூரையில் மின்னல் தாக்கி 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள ஆண்டிய கவுண்டர் ஊராட்சிக்குட்பட்ட உரல்பட்டி கிராமத்தில் நேற்று மாலை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில், இப்பகுதியில் வசித்து வரும் சுப்பிரமணி (52) என்பவரின் சிமெண்ட் மேற்கூரை வீட்டின் மீது இரவு 11 மணி அளவில் மின்னல் தாக்கியது.



இந்த சம்பவத்தில், வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டி, கிரைண்டர், வாஷிங் மெஷின், தொலைக்காட்சி மற்றும் ரொக்கம் 10,000 ரூபாய் உள்ளிட்ட சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகின. சுப்பிரமணி வெளியூர் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், அவரது மனைவி வள்ளிநாயகம் (45) தனது மகள் மற்றும் குழந்தையுடன் அருகிலுள்ள வீட்டில் தங்கியிருந்ததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.



சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆண்டிய கவுண்டனூர் ஊராட்சி மன்றத் தலைவர் மோகனவள்ளி ராஜசேகரன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்தார்.

இது குறித்து வள்ளிநாயகம் கூறுகையில், "நேற்று இடைவிடாமல் கனமழை பெய்து வந்தது. இரவு 11 மணி அளவில் பலத்த சத்தம் கேட்டது. உடனே வீட்டிலிருந்து புகை வருவதைக் கண்டோம். அருகில் இருந்த பொதுமக்கள் வீடு தீப்பிடித்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர். வந்து பார்த்த பிறகுதான் வீட்டின் மீது மின்னல் தாக்கியதால் மின்விபத்து ஏற்பட்டு அனைத்துப் பொருட்களும் எரிந்து சாம்பலாகி உள்ளது தெரிய வந்தது. தற்போது சமையல் செய்வதற்குக் கூட பொருட்கள் எதுவும் இல்லை. எனவே, வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...