உடுமலை அருகே இடிமின்னலுடன் கனமழை: வீட்டின் மேற்கூரையில் மின்னல் தாக்கி 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உரல்பட்டி கிராமத்தில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. ஒரு வீட்டின் மேற்கூரையில் மின்னல் தாக்கி 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள ஆண்டிய கவுண்டர் ஊராட்சிக்குட்பட்ட உரல்பட்டி கிராமத்தில் நேற்று மாலை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில், இப்பகுதியில் வசித்து வரும் சுப்பிரமணி (52) என்பவரின் சிமெண்ட் மேற்கூரை வீட்டின் மீது இரவு 11 மணி அளவில் மின்னல் தாக்கியது.



இந்த சம்பவத்தில், வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டி, கிரைண்டர், வாஷிங் மெஷின், தொலைக்காட்சி மற்றும் ரொக்கம் 10,000 ரூபாய் உள்ளிட்ட சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகின. சுப்பிரமணி வெளியூர் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், அவரது மனைவி வள்ளிநாயகம் (45) தனது மகள் மற்றும் குழந்தையுடன் அருகிலுள்ள வீட்டில் தங்கியிருந்ததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.



சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆண்டிய கவுண்டனூர் ஊராட்சி மன்றத் தலைவர் மோகனவள்ளி ராஜசேகரன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்தார்.

இது குறித்து வள்ளிநாயகம் கூறுகையில், "நேற்று இடைவிடாமல் கனமழை பெய்து வந்தது. இரவு 11 மணி அளவில் பலத்த சத்தம் கேட்டது. உடனே வீட்டிலிருந்து புகை வருவதைக் கண்டோம். அருகில் இருந்த பொதுமக்கள் வீடு தீப்பிடித்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர். வந்து பார்த்த பிறகுதான் வீட்டின் மீது மின்னல் தாக்கியதால் மின்விபத்து ஏற்பட்டு அனைத்துப் பொருட்களும் எரிந்து சாம்பலாகி உள்ளது தெரிய வந்தது. தற்போது சமையல் செய்வதற்குக் கூட பொருட்கள் எதுவும் இல்லை. எனவே, வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

Newsletter

சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சா...

கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவி...

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...