மேட்டுப்பாளையத்தில் தனியார் பேருந்து மோதி இருசக்கர வாகன ஓட்டுநர் காயம் - உதவாமல் சென்ற பேருந்து ஊழியர்கள்

மேட்டுப்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தை மோதியதில் ஓட்டுநர் காலில் முறிவு. விபத்துக்குப் பின் உதவாமல் சென்ற பேருந்து ஊழியர்களின் செயல் சி.சி.டி.வி. காட்சிகளில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: மேட்டுப்பாளையத்தில் தனியார் பேருந்து ஒன்று இருசக்கர வாகனத்தை மோதி விபத்து ஏற்படுத்தியதில் வாகன ஓட்டுநர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டுப்பாளையத்திலிருந்து கோவைக்கு தினசரி பல அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பாதையில் தனியார் பேருந்துகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்வதாக புகார்கள் எழுந்துள்ளன. அசுர வேகத்தில் செல்லும் இந்த பேருந்துகள் மற்ற வாகனங்களை பொருட்படுத்தாமல் ஓட்டப்படுவதாக கூறப்படுகிறது.

நேற்று இரவு மேட்டுப்பாளையத்திலிருந்து கோவைக்கு சென்ற 'தாமரை' என்ற தனியார் பேருந்து, ஹவுசிங் யூனிட் பகுதியில் முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தை முந்த முயன்றபோது மோதியது. இதில் இருசக்கர வாகன ஓட்டுநர் கீழே விழுந்தார். பேருந்தின் சக்கரம் அவரது வலது காலில் ஏறி இறங்கியதால் எலும்பு முறிவு ஏற்பட்டது.

விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரும் காயமடைந்தவரை பார்த்த பின்னர், மருத்துவமனைக்கு அனுப்பாமல் சாலையோரம் அமர வைத்துவிட்டு சென்றுவிட்டனர். பின்னர் அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். காயமடைந்தவர் முதலில் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கும், பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டார்.

இந்த சம்பவம் அருகில் இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விபத்துக்குப் பின் உதவாமல் சென்ற பேருந்து ஊழியர்களின் செயல் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது. இது போன்ற விபத்துகளை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...