மேட்டுப்பாளையத்தில் தனியார் பேருந்து மோதி இருசக்கர வாகன ஓட்டுநர் காயம் - உதவாமல் சென்ற பேருந்து ஊழியர்கள்

மேட்டுப்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தை மோதியதில் ஓட்டுநர் காலில் முறிவு. விபத்துக்குப் பின் உதவாமல் சென்ற பேருந்து ஊழியர்களின் செயல் சி.சி.டி.வி. காட்சிகளில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: மேட்டுப்பாளையத்தில் தனியார் பேருந்து ஒன்று இருசக்கர வாகனத்தை மோதி விபத்து ஏற்படுத்தியதில் வாகன ஓட்டுநர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டுப்பாளையத்திலிருந்து கோவைக்கு தினசரி பல அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பாதையில் தனியார் பேருந்துகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்வதாக புகார்கள் எழுந்துள்ளன. அசுர வேகத்தில் செல்லும் இந்த பேருந்துகள் மற்ற வாகனங்களை பொருட்படுத்தாமல் ஓட்டப்படுவதாக கூறப்படுகிறது.

நேற்று இரவு மேட்டுப்பாளையத்திலிருந்து கோவைக்கு சென்ற 'தாமரை' என்ற தனியார் பேருந்து, ஹவுசிங் யூனிட் பகுதியில் முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தை முந்த முயன்றபோது மோதியது. இதில் இருசக்கர வாகன ஓட்டுநர் கீழே விழுந்தார். பேருந்தின் சக்கரம் அவரது வலது காலில் ஏறி இறங்கியதால் எலும்பு முறிவு ஏற்பட்டது.

விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரும் காயமடைந்தவரை பார்த்த பின்னர், மருத்துவமனைக்கு அனுப்பாமல் சாலையோரம் அமர வைத்துவிட்டு சென்றுவிட்டனர். பின்னர் அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். காயமடைந்தவர் முதலில் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கும், பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டார்.

இந்த சம்பவம் அருகில் இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விபத்துக்குப் பின் உதவாமல் சென்ற பேருந்து ஊழியர்களின் செயல் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது. இது போன்ற விபத்துகளை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...