கோவையில் ஶ்ரீ ராமலிங்க சௌவுடாம்பிகை அம்மனுக்கு கத்தி போடும் திருவிழா கோலாகலம்

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள ஶ்ரீ ராமலிங்க சௌவுடாம்பிகை அம்மன் கோவிலில் விஜயதசமி நாளில் கத்தி போடும் திருவிழா நடைபெற்றது. 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வேசுக்கோ, தீசுக்கோ கோஷங்கள் எழுப்பினர்.



கோவை: கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள ஶ்ரீ ராமலிங்க சௌவுடாம்பிகை அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் விஜயதசமி நாளில் நடைபெறும் கத்தி போடும் திருவிழா இந்த ஆண்டும் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த ஆண்டு, கோவை சாய் பாபா காலணியில் உள்ள விநாயகர் கோவிலில் காலை கத்தி போடும் திருவிழா ஊர்வலம் தொடங்கியது.



இதில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வேசுக்கோ, தீசுக்கோ என்ற கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஊர்வலம் சுமார் 400 ஆண்டுகளாக பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.



ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் வேசுக்கோ, தீசுக்கோ என்று பாடிக் கொண்டும், ஆடிக்கொண்டும் கத்தியால் கைகளில் வெட்டிக் கொண்டே அம்மனை அழைத்தனர்.



பக்தர்களின் உடலில் ரத்தம் வழிந்து ஓடியது.



வெட்டுக் காயங்களின் மீது திருமஞ்சனப் பொடியை வைத்துக் கொண்டு, ஆடிக்கொண்டே சென்றனர். இந்த திருமஞ்சன பொடியை வைத்தால் 3 நாட்களில் காயம் சரியாகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.



ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக டவுன்ஹாலில் உள்ள ஶ்ரீ ராமலிங்க சௌவுடாம்பிகை அம்மன் கோவிலை வந்தடைந்தது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கத்தி போடும் திருவிழாவை பார்த்து பரவசம் அடைந்தனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...