கோவை கவுண்டம்பாளையம் மற்றும் துடியலூரில் கனமழை: வாகன ஓட்டிகள் அவதி

கோவை கவுண்டம்பாளையம், இடையர்பாளையம் மற்றும் துடியலூர் பகுதிகளில் திடீர் கனமழை பெய்தது. வாகன ஓட்டிகள், குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.



கோவை கவுண்டம்பாளையம், இடையர்பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் இன்று (அக்டோபர் 11) காலை முதல் கரு மேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசியது. பின்னர் திடீரென கனமழை பொழிந்தது. இந்த எதிர்பாராத மழையால் இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். பலர் தங்கள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி, மழை நிற்பதற்காக காத்திருந்தனர்.

அதேசமயம், துடியலூர் பேருந்து நிலையம் மற்றும் கரிகடை அதை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (அக்டோபர் 10) காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை மற்றும் மதிய நேரங்களில் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. பின்னர் தொடர்ச்சியாக மழை பெய்யத் தொடங்கியது.

இந்த திடீர் மழையால் துடியலூர் பகுதியிலும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். பலர் மழை நிற்கும் வரை சாலையோரங்களில் காத்திருந்தனர். இந்த எதிர்பாராத மழை காரணமாக பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...