திருப்பூரில் சிறுவர்கள் சைக்கிள்களுக்கு ஆயுத பூஜை: பெரியவர்களுக்கு இணையாக கொண்டாட்டம்

திருப்பூரில் சிறுவர்கள் தங்கள் சைக்கிள்களுக்கு ஆயுத பூஜை செய்து கொண்டாடினர். பெரியவர்களைப் போலவே சைக்கிள்களை சுத்தம் செய்து, அலங்கரித்து, வழிபாடு செய்தனர்.



திருப்பூர்: திருப்பூரில் சிறுவர்கள் பெரியவர்களுக்கு இணையாக ஆயுத பூஜையை கொண்டாடி உள்ளனர். தமிழகம் முழுவதும் தொழிலுக்கு சிறப்பு செய்யும் ஆயுத பூஜை கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

பெரியவர்கள் தங்கள் தொழிலுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வேலை செய்யும் இடத்தை தூய்மை செய்து, இயந்திரங்களுக்கு பொட்டு வைத்து அலங்கரித்து சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். மேலும் தங்களது வாகனங்களுக்கும் பூஜை செய்து வருகின்றனர்.

இதேபோல், பெரியவர்களுக்கு தாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் திருப்பூரில் சிறுவர்கள் தங்களது வாகனமான சைக்கிளுக்கு ஆயுத பூஜை செய்துள்ளனர்.



சைக்கிள்களை தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்து, மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து, பூக்களை வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.



பெரியவர்களுக்கு இணையாக சிறுவர்களும் திருப்பூரில் ஆயுத பூஜை கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த புதுமையான கொண்டாட்டம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...