திருப்பூரில் சிறுவர்கள் சைக்கிள்களுக்கு ஆயுத பூஜை: பெரியவர்களுக்கு இணையாக கொண்டாட்டம்

திருப்பூரில் சிறுவர்கள் தங்கள் சைக்கிள்களுக்கு ஆயுத பூஜை செய்து கொண்டாடினர். பெரியவர்களைப் போலவே சைக்கிள்களை சுத்தம் செய்து, அலங்கரித்து, வழிபாடு செய்தனர்.



திருப்பூர்: திருப்பூரில் சிறுவர்கள் பெரியவர்களுக்கு இணையாக ஆயுத பூஜையை கொண்டாடி உள்ளனர். தமிழகம் முழுவதும் தொழிலுக்கு சிறப்பு செய்யும் ஆயுத பூஜை கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

பெரியவர்கள் தங்கள் தொழிலுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வேலை செய்யும் இடத்தை தூய்மை செய்து, இயந்திரங்களுக்கு பொட்டு வைத்து அலங்கரித்து சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். மேலும் தங்களது வாகனங்களுக்கும் பூஜை செய்து வருகின்றனர்.

இதேபோல், பெரியவர்களுக்கு தாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் திருப்பூரில் சிறுவர்கள் தங்களது வாகனமான சைக்கிளுக்கு ஆயுத பூஜை செய்துள்ளனர்.



சைக்கிள்களை தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்து, மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து, பூக்களை வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.



பெரியவர்களுக்கு இணையாக சிறுவர்களும் திருப்பூரில் ஆயுத பூஜை கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த புதுமையான கொண்டாட்டம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...