சூலூரில் கடத்தப்பட்ட இரண்டு மாணவிகள் மும்பையில் இருந்து மீட்பு: இரு வடமாநில இளைஞர்கள் கைது

கோவை சூலூரில் கடத்தப்பட்ட இரண்டு 11ஆம் வகுப்பு மாணவிகள் மும்பையில் இருந்து மீட்கப்பட்டனர். வடமாநிலத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Coimbatore: கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பள்ளியில் படிக்கும் இரண்டு 11ஆம் வகுப்பு மாணவிகள் கடத்தப்பட்டு மும்பையில் இருந்து மீட்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக இரு வடமாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சூலூர் பகுதியைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் கடந்த வாரம் பள்ளியில் நடைபெறும் சிறப்பு வகுப்புக்குச் செல்வதாகக் கூறி வீட்டில் இருந்து கிளம்பினர். ஆனால் மாலையில் வீடு திரும்பவில்லை. இரவு நேரமாகியும் மாணவிகள் திரும்பாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள், தோழிகள் மற்றும் உறவினர் வீடுகள் என பல இடங்களில் தேடினர்.

மாணவிகளைக் காணவில்லை என்பதால் பெற்றோர் சூலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் சுமதி உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனுக்குத் தகவல் தெரிவித்தார். அவரது உத்தரவின் பேரில் கருமத்தம்பட்டி டிஎஸ்பி தலைமையில் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டது.

மாணவிகளின் செல்போன் எண்களை வைத்து விசாரிக்கும்போது, அவர்களை கடத்திய மனோஜ் குமார் மற்றும் சாய் கியான் ஆகியோர் மும்பையில் இருப்பது தெரிய வந்தது. மும்பை போலீசாரின் உதவியோடு காவல்துறையினர் மாணவிகளை மீட்டு சூலூருக்கு அழைத்து வந்தனர்.

விசாரணைக்குப் பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இன்று (அக்டோபர் 10) கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மாணவிகளின் வீட்டின் அருகே வடமாநில வாலிபர்கள் சிலர் தங்கி இருந்ததாகவும், அவர்கள் கேட்டரிங் மற்றும் அங்குள்ள தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

Newsletter

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...