சூலூரில் கடத்தப்பட்ட இரண்டு மாணவிகள் மும்பையில் இருந்து மீட்பு: இரு வடமாநில இளைஞர்கள் கைது

கோவை சூலூரில் கடத்தப்பட்ட இரண்டு 11ஆம் வகுப்பு மாணவிகள் மும்பையில் இருந்து மீட்கப்பட்டனர். வடமாநிலத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Coimbatore: கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பள்ளியில் படிக்கும் இரண்டு 11ஆம் வகுப்பு மாணவிகள் கடத்தப்பட்டு மும்பையில் இருந்து மீட்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக இரு வடமாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சூலூர் பகுதியைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் கடந்த வாரம் பள்ளியில் நடைபெறும் சிறப்பு வகுப்புக்குச் செல்வதாகக் கூறி வீட்டில் இருந்து கிளம்பினர். ஆனால் மாலையில் வீடு திரும்பவில்லை. இரவு நேரமாகியும் மாணவிகள் திரும்பாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள், தோழிகள் மற்றும் உறவினர் வீடுகள் என பல இடங்களில் தேடினர்.

மாணவிகளைக் காணவில்லை என்பதால் பெற்றோர் சூலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் சுமதி உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனுக்குத் தகவல் தெரிவித்தார். அவரது உத்தரவின் பேரில் கருமத்தம்பட்டி டிஎஸ்பி தலைமையில் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டது.

மாணவிகளின் செல்போன் எண்களை வைத்து விசாரிக்கும்போது, அவர்களை கடத்திய மனோஜ் குமார் மற்றும் சாய் கியான் ஆகியோர் மும்பையில் இருப்பது தெரிய வந்தது. மும்பை போலீசாரின் உதவியோடு காவல்துறையினர் மாணவிகளை மீட்டு சூலூருக்கு அழைத்து வந்தனர்.

விசாரணைக்குப் பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இன்று (அக்டோபர் 10) கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மாணவிகளின் வீட்டின் அருகே வடமாநில வாலிபர்கள் சிலர் தங்கி இருந்ததாகவும், அவர்கள் கேட்டரிங் மற்றும் அங்குள்ள தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...