ஆயுத பூஜையை முன்னிட்டு கோவை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு

கோவை பூ மார்க்கெட்டில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்துள்ளது. செவ்வந்தி, மல்லி, முல்லை உள்ளிட்ட பூக்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விலை குறைவாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.



Coimbatore: கோவை பூ மார்க்கெட்டில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. வாகனங்கள் மற்றும் தொழிற்கூடங்களில் பூஜை செய்வதற்காக மக்கள் அதிக அளவில் பூக்களை வாங்கி வருகின்றனர்.

தற்போதைய விலை நிலவரப்படி, செவ்வந்தி பூ கிலோ ரூ.300 முதல் ரூ.400 வரையும், மல்லி பூ கிலோ ரூ.800 முதல் ரூ.1000 வரையும், முல்லை பூ கிலோ ரூ.700 முதல் ரூ.800 வரையும், அரளி பூ கிலோ ரூ.400, கோழி கொண்டை பூ கிலோ ரூ.120 முதல் ரூ.160 வரையும், ரோஜா பூ கிலோ ரூ.300 முதல் ரூ.400 வரையும் விற்பனையாகி வருகிறது.



பூக்களுடன் சேர்த்து வாழை கன்று ஜோடி ரூ.30, கரும்பு ஜோடி ரூ.150, மா இலை ரூ.30, பூசணிக்காய் கிலோ ரூ.40 என்ற விலையில் விற்பனையாகி வருகின்றன. பொரி, பழ வகைகள் உள்ளிட்டவைகளும் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன.

பூ வியாபாரி சங்கத்தின் துணைத் தலைவர் ஹக்கீம் கூறுகையில், "கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பூக்களின் விலை சற்று குறைவாக உள்ளது. கடந்த ஆண்டு அதிக மழை பெய்ததால் பூக்களின் வரத்து குறைந்திருந்தது. அதனால் அதிக விலைக்கு பூக்கள் விற்கப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு மழை குறைவாக இருந்ததால், பொதுவான விலையிலேயே பூக்கள் கிடைக்கின்றன," என்று தெரிவித்தார்.

பூ மார்க்கெட் பகுதியில் பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் நாளை நடைபெறும் ஆயுத பூஜைக்காக அதிக அளவில் பூக்களை வாங்கி வருகின்றனர். இதனால் சந்தையில் கூட்டம் அலை மோதுகிறது.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...