ஆயுத பூஜையை முன்னிட்டு கோவை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு

கோவை பூ மார்க்கெட்டில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்துள்ளது. செவ்வந்தி, மல்லி, முல்லை உள்ளிட்ட பூக்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விலை குறைவாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.



Coimbatore: கோவை பூ மார்க்கெட்டில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. வாகனங்கள் மற்றும் தொழிற்கூடங்களில் பூஜை செய்வதற்காக மக்கள் அதிக அளவில் பூக்களை வாங்கி வருகின்றனர்.

தற்போதைய விலை நிலவரப்படி, செவ்வந்தி பூ கிலோ ரூ.300 முதல் ரூ.400 வரையும், மல்லி பூ கிலோ ரூ.800 முதல் ரூ.1000 வரையும், முல்லை பூ கிலோ ரூ.700 முதல் ரூ.800 வரையும், அரளி பூ கிலோ ரூ.400, கோழி கொண்டை பூ கிலோ ரூ.120 முதல் ரூ.160 வரையும், ரோஜா பூ கிலோ ரூ.300 முதல் ரூ.400 வரையும் விற்பனையாகி வருகிறது.



பூக்களுடன் சேர்த்து வாழை கன்று ஜோடி ரூ.30, கரும்பு ஜோடி ரூ.150, மா இலை ரூ.30, பூசணிக்காய் கிலோ ரூ.40 என்ற விலையில் விற்பனையாகி வருகின்றன. பொரி, பழ வகைகள் உள்ளிட்டவைகளும் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன.

பூ வியாபாரி சங்கத்தின் துணைத் தலைவர் ஹக்கீம் கூறுகையில், "கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பூக்களின் விலை சற்று குறைவாக உள்ளது. கடந்த ஆண்டு அதிக மழை பெய்ததால் பூக்களின் வரத்து குறைந்திருந்தது. அதனால் அதிக விலைக்கு பூக்கள் விற்கப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு மழை குறைவாக இருந்ததால், பொதுவான விலையிலேயே பூக்கள் கிடைக்கின்றன," என்று தெரிவித்தார்.

பூ மார்க்கெட் பகுதியில் பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் நாளை நடைபெறும் ஆயுத பூஜைக்காக அதிக அளவில் பூக்களை வாங்கி வருகின்றனர். இதனால் சந்தையில் கூட்டம் அலை மோதுகிறது.

Newsletter

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...