ஆனைகட்டி அருகே சுருக்கு கம்பியால் மான் வேட்டையாடிய 5 பேர் கைது

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஆர்நாட்டுக்காடு பகுதியில் சுருக்கு கம்பி மூலம் பெண் புள்ளி மான் வேட்டையாடப்பட்டது. வனத்துறையினர் 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Coimbatore: கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே உள்ள ஆர்நாட்டுக்காடு பகுதியில் மான் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அக்டோபர் 9 அன்று ரோந்து சென்ற வனத்துறையினர், பழனிச்சாமி மற்றும் ராமகிருஷ்ணன் ஆகிய இருவர் சுருக்கு கம்பி மூலம் பெண் புள்ளி மான் ஒன்றை வேட்டையாடியதை கண்டறிந்தனர்.

விசாரணையில், பழனிச்சாமியின் வீட்டு அருகே உள்ள பள்ளத்தில் வைத்து மானை தோலுரித்து, வெட்டுக்கத்தி மூலம் கூறு போட்டதாக தெரியவந்தது. பழனிச்சாமி மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் தலா 2 கிலோ மான் இறைச்சியை தங்கள் வீட்டிற்கு சமைப்பதற்காக எடுத்துச் சென்றனர்.

மீதமுள்ள சுமார் பத்து கிலோ மான் இறைச்சியை தடாகம் பகுதியில் உள்ள மாதேஷ், மணிகண்டன், குரு ஷியாம் ஆகிய மூன்று பேருக்கு 4,000 ரூபாய்க்கு விற்றுள்ளதாக தெரியவந்தது. வனத்துறையினர் இந்த தகவலின் அடிப்படையில் மூவரையும் கைது செய்தனர்.

வனத்துறையினர் மானை வேட்டையாடி விற்பனையில் ஈடுபட்ட மொத்தம் 5 பேரை கைது செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் வனவிலங்குகள் பாதுகாப்பு முயற்சிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டியுள்ளது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...