உடுமலை அருகே மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய மின் பொறியாளர் கைது

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கொங்கல் நகரத்தில், விவசாய மின் இணைப்புக்கு ரூ.2000 லஞ்சம் கேட்ட உதவி மின் பொறியாளர் சத்தியவானி முத்து, லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கொங்கல் நகரத்தில், விவசாய மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொங்கல் நகரத்தைச் சேர்ந்த விவசாயி ஜெயராமன், தனது விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு பெற தட்கல் முறையில் விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில், விண்ணப்பத்தின் பேரில் விவசாயி ஜெயராமனை அழைத்த கொங்கல் நகர உதவி மின் பொறியாளர் சத்தியவானி முத்து, மின் மீட்டர் பொருத்தி இணைப்பு தர ரூ.2000 லஞ்சமாக கேட்டுள்ளார்.



இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயி ஜெயராமன், திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் கொடுத்தார். லஞ்ச ஒழிப்புத் துறையினரின் ஆலோசனைப்படி, ரசாயனம் தடவிய ரூ.2000 பணத்தை உதவி மின் பொறியாளர் சத்தியவானி முத்துவிடம் விவசாயி கொடுக்கும் போது, காத்திருந்த அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து அவரை கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை காவல் ஆய்வாளர் சசிரேகா தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் லஞ்ச பணத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். உடுமலை அருகே விவசாய மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது செய்யப்பட்ட இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...