உடுமலை அருகே மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய மின் பொறியாளர் கைது

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கொங்கல் நகரத்தில், விவசாய மின் இணைப்புக்கு ரூ.2000 லஞ்சம் கேட்ட உதவி மின் பொறியாளர் சத்தியவானி முத்து, லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கொங்கல் நகரத்தில், விவசாய மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொங்கல் நகரத்தைச் சேர்ந்த விவசாயி ஜெயராமன், தனது விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு பெற தட்கல் முறையில் விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில், விண்ணப்பத்தின் பேரில் விவசாயி ஜெயராமனை அழைத்த கொங்கல் நகர உதவி மின் பொறியாளர் சத்தியவானி முத்து, மின் மீட்டர் பொருத்தி இணைப்பு தர ரூ.2000 லஞ்சமாக கேட்டுள்ளார்.



இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயி ஜெயராமன், திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் கொடுத்தார். லஞ்ச ஒழிப்புத் துறையினரின் ஆலோசனைப்படி, ரசாயனம் தடவிய ரூ.2000 பணத்தை உதவி மின் பொறியாளர் சத்தியவானி முத்துவிடம் விவசாயி கொடுக்கும் போது, காத்திருந்த அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து அவரை கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை காவல் ஆய்வாளர் சசிரேகா தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் லஞ்ச பணத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். உடுமலை அருகே விவசாய மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது செய்யப்பட்ட இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...